8064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةٌ»
Al-Mu’jam al-Awsat
8064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஸஹர் உணவு சாப்பிடுங்கள்; நிச்சயமாக ஸஹர் உணவு சாப்பிடுவதில் பரக்கத் இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةٌ»
6434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»
8421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நோன்பாளி முத்தமிடுவது பற்றி ஒரு இளைஞர் கேட்டால் அவரை அதைவிட்டும் தடுப்பார்கள். ஒரு முதியவர் அதைப்பற்றி கேட்டால் அவருக்கு அனுமதியளிப்பார்கள். மேலும், இளைஞர், முதியவர் போன்று அல்ல என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَأَلَهُ الشَّابُّ عَنِ الْقُبْلَةِ نَهَاهُ، وَإِذَا سَأَلَهُ الشَّيْخُ رَخَّصَ لَهُ، وَقَالَ: «إِنَّ الشَّابَّ لَيْسَ كَالشَّيْخِ»
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில், ஒரு மனிதனை மலை போன்ற அளவு நன்மைகள் பின்தொடரும். உடனே அவன் இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இது கிடைத்தது)” என்று கூறப்படும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
«يَتْبَعُ الرَّجُلَ مِنَ الْحَسَنَاتِ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالُ الْجِبَالِ، فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ»
5108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
«إِنَّ اللَّهَ لَيُبَلِّغُ الْعَبْدَ الدَّرَجَةَ، فَيَقُولُ: يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ الدَّرَجَةُ؟ فَيَقُولُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ»
7549. நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»
5818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவரின் சார்பாக ஹஜ் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்பவருக்கு அவருக்கு கிடைக்கும் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
நன்மையான காரியத்தை அறிவித்தவருக்கு அதைச் செய்தவரின் கூலியை போன்ற கூலி கிடைக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ حَجَّ عَنْ مَيِّتٍ فَلِلَّذِي حَجَّ عَنْهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ، وَمَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ»
1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளிக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அவரை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»
8438. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்..
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا»
7136. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி கிடைக்கும்…
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْئًا، وَمَا عَمِلَ مَنْ أَعْمَالِ الْبِرِّ إِلَّا كَانَ أَجْرُهُ كَصَاحِبِ الطَّعَامِ، مَا كَانَ مِنْ قُوَّةِ الطَّعَامِ فِيهِ»
சமீப விமர்சனங்கள்