Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-446

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)


«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعَ رَكَعَاتٍ حَرَّمَ اللهُ جَسَدَهُ عَلَى النَّارِ»


Almujam-Alkabir-2039

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2039.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ سَبْعَ تَمَرَاتٍ»


Almujam-Alkabir-7918

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7918. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)

1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.

2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.

அவ்விரு அடையாளங்கள்:

1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.

2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ: قَطْرَةُ دُمُوعٍ مِنْ خَشْيَةِ اللهِ، وَقَطْرَةُ دَمٍ تُهْرَاقُ فِي سَبِيلِ اللهِ. وَأَمَّا الْأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللهِ


Almujam-Alkabir-7113

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ، وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»


Almujam-Alkabir-7112

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

7112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ وَمَكْرَمَةٌ لِلنِّسَاءِ»


Almujam-Alkabir-8137

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8137. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)


كَانَتْ بِالْمَدِينَةِ امْرَأَةٌ تَخْفِضُ النِّسَاءَ، يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْفِضِي، وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَنْضَرُ لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»


Almujam-Alkabir-1054

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்புகள்:

1054. முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.

மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَقَالَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدَهَا يَدُ الرِّجَالِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: «مَا طَهَّرَ اللهُ كَفًّا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»


Almujam-Alkabir-771

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

771. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ فَقَالَ: «انْطَلِقِي فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَى حَتَّى أُبَايِعَكِ»


Almujam-Alkabir-770

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

770. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ، فَقَالَ: «انْطَلِقِي فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَى حَتَّى أُبَايِعَكِ»


Next Page » « Previous Page