9298.
«أَنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ» يَرْفَعُ يَدَيْهِ فِي أَوَّلِ شَيْءٍ، ثُمَّ لَا يَرْفَعُ بَعْدُ
Al-Mu’jam Al-Kabir
9298.
«أَنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ» يَرْفَعُ يَدَيْهِ فِي أَوَّلِ شَيْءٍ، ثُمَّ لَا يَرْفَعُ بَعْدُ
8540. ஒருவர் எதைக் குறிக்கோளாகக் கொண்டு ஹிஜ்ரத் (நாடு துறத்தலை) செய்கிறாரோ அதையே அவர் அடைவார். ஒருவர் “உம்மு கைஸ்” என்ற பெண்ணை திருமணம் செய்வதற்காக ஹிஜ்ரத் செய்தார். எனவே அவருக்கு முஹாஜிர் உம்மு கைஸ் (உம்மு கைஸுக்காக ஹிஜ்ரத் செய்தவர்) என்று கூறப்பட்டது என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)
«مَنْ هَاجَرَ يَبْتَغِي شَيْئًا فَهُوَ لَهُ» ، قَالَ: ” هَاجَرَ رَجُلٌ لِيَتَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا: أُمُّ قَيْسٍ، وَكَانَ يُسَمَّى مُهَاجِرَ أُمِّ قَيْسٍ
3900. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஅய்யூப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்ட ஒரு செயலை உனக்கும் கட்டளையிடவா? என்று கூறிவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவதாகும். ஏனெனில். அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம்“ என்று கூறினார்கள்.
لَقِيتُ أَبَا أَيُّوبَ، فَقَالَ لِي: أَلَا آمُرُكَ بِمَا أَمَرَنِي بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ، وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ فَإِنَّهَا مِنْ كُنُوزِ الْجَنَّةِ»
3899. அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த ஒரு வார்த்தையை உனக்கும் கற்றுத்தரவா?” என்று அபூஅய்யூப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” கற்றுத்தாருங்கள் எனது தந்தையின் சகோதரரே! என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் (அடைக்கலமாக) தங்க வந்த சமயம், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உமக்கு கற்றுத்தரட்டுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம்” அல்லாஹ்வின் தூதரே! “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்! என்று கூறினேன். அப்போது அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவீராக! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
قَالَ لِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً عَلَّمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قُلْتُ: بَلَى يَا عَمِّ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ نَزَلَ عَلَيَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ يَا أَبَا أَيُّوبَ كَلِمَةً مِنْ كَنْزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: «أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»
3898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “(இவர் தான்) முஹம்மது” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், எனக்கு ஸலாம் கூறி (வருக! வருக! என்று) வரவேற்றார்கள்.
பிறகு “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக நல்லது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நான், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டேன். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
لَيْلَةَ أُسْرِيَ بِي مَرَرْتُ بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا جِبْرِيلُ مَنْ هَذَا مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، فَسَلَّمَ عَلَيَّ وَرَحَّبَ بِي وَقَالَ: مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيْبَةٌ وَاسِعَةٌ “، فَقُلْتُ: وَمَا غَرْسُ الْجَنَّةِ؟، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»
9776. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) மனிதர்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அப்போது இரக்கம்காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான். அப்போது பாவமன்னிப்புக் கேட்போருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அப்போது விரோதம் கொள்வோருக்கு (எதுவும் வழங்காமல்) விட்டுவிடுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
«تُعْرَضُ أَعْمَالُ بَنِي آدَمَ كُلَّ يَوْمِ اثْنَيْنِ، وَفِي كُلِّ يَوْمِ خَمِيسٍ، فَيَرْحَمُ الْمُتَرَحِّمِينَ وَيَغْفِرُ للمُسْتَغْفِرِينَ، ثُمَّ يَذَرُ أَهْلَ الْحِقَدْ بِحِقْدِهِمْ»
3972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் உயர்த்தப்படுகின்றன. சண்டையிட்டு பேசிக்கொள்ளாத இருவரின் செயல்களைத் தவிர.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
«مَا مِنْ يَوْمٍ إِثْنَيْنِ أَوْ خَمِيسٍ إِلَّا يُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ إِلَّا أَعْمَالَ الْمُتَهَاجِرَيْنَ»
4871. காரிஜா பின் ஸைத் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் அவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் எங்களை எழுத விட்டால் உங்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்கிறோம் என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் “இல்லை” (எழுதக்கூடாது) என்று கூறி மறுத்துவிட்டார். என்றாலும் மர்வான் கூடாரத்திற்கு பின் ஸைத் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் ஒருவரை அமரவைத்து மர்வான் ஹதீஸ்களை கேட்க ஸைத் (ரலி) அவர்கள் கூறும் ஹதீஸ்களை எழுத்தாளர் எழுதிக்கொண்டார். பிறகு மர்வான், “அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் மறுத்ததை நாங்கள் செய்துவிட்டோம்” என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எழுதப்பட்ட அந்த ஏட்டை கொண்டுவராவிட்டால் இதற்கு மேல் ஹதீஸை அறிவிக்கமாட்டேன் என்று கூறினார். எனவே! மர்வான் அதைக் கொண்டு வர அதைக் கிழித்து விட்டு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்களை எழுதுவதை விட்டு எங்களைத் தடுத்தார்கள்” என்று கூறினார்.
أَنَّ مَرْوَانَ، قَالَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ: يَا أَبَا سَعِيدٍ، لَوْ أَنَّكَ تَرَكْتَنَا لَكَتَبْنَا عَنْكَ حَدِيثَكَ، فَقَالَ زَيْدٌ: لَا، فَأَجْلَسَ لَهُ مَرْوَانُ كَاتِبًا خَلْفَ الْقُبَّةِ، فَجَعَلَ هُوَ يَسْأَلُ زَيْدًا وَيَكْتُبُ الْكَاتِبُ مَا يُحَدِّثُ بِهِ زَيْدٌ، فَقَالَ: يَا أَبَا سَعِيدٍ مَا أُرَانَا إِلَّا قَدْ ظَفِرْنَا بِمَا أَبَيْتَ قَالَ: وَاللهِ لَا أَرْمِي حَتَّى أُوتَى بِهِ. فَجَاءَ بِالْكِتَابِ فَشَقَّهُ، وَقَالَ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَكْتُبَ حَدِيثَهُ»
8773. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், தனது மனைவி(யரில் ஒருவரி)டம் இன்றைய நாள் சிறந்ததா? அல்லது நேற்றைய நாள் சிறந்ததா? என்று கேட்டார். அதற்கவர், “எனக்கு தெரியாது” என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், என்றாலும் எனக்குத் தெரியும். நேற்றைய தினம் இன்றைய தினத்தை விட சிறந்தது. இன்றைய தினம் நாளைய தினத்தை விட சிறந்தது. இவ்வாறே மறுமைநாள் வரை (வரும் முந்தைய நாட்கள் பிந்தைய நாட்களை விட சிறந்தது) என்று கூறினார்.
قَالَ عَبْدُ اللهِ لِامْرَأَتِهِ: «الْيَوْمَ خَيْرٌ أَمْ أَمْسِ؟» فَقَالَتْ: لَا أَدْرِي، فَقَالَ: «لَكِنِّي أَدْرِي، أَمْسِ خَيْرٌ مِنَ الْيَوْمِ، وَالْيَوْمُ خَيْرٌ مِنْ غَدٍ، وَكَذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
8551. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும். (இதன் கருத்து) இந்த வருடம் (பின்வரும்) அந்த வருடத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல. இந்த சமுதாயம் (பின்வரும்) அந்த சமுதாயத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல.
மாறாக, உங்களில் உள்ள சிறந்தோரும், அறிஞர்களும் மேதைகளும் (இறந்து) போய்விட (அவர்களுக்கு பின்வரும்) கூட்டம் அவர்களின் சுயகருத்துக்களை அளவுகோலாக கொண்டே சட்டமெடுப்பார்கள். அதனால் இஸ்லாம் அழிந்து துண்டுதுண்டாகிவிடும் (என்பதே இதன் பொருளாகும்)
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
«لَيْسَ عَامٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، وَلَا عَامٌ خَيْرٌ مِنْ عَامٍ، وَلَا أُمَّةٌ خَيْرٌ مِنْ أُمَّةٍ، وَلَكِنْ ذَهَابُ خِيَارِكُمْ وَعُلَمَائِكُمْ، وَيُحَدِّثُ قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيَنْهَدِمُ الْإِسْلَامُ وَيَنْثَلِمُ»
சமீப விமர்சனங்கள்