Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-6130

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6130. மிகைத்தவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ், ஒரு அடியான்  தனது இருகரமேந்தி அவனிடம் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)


«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Almujam-Alkabir-6148

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6148. நிச்சயமாக மதிப்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் ஒன்றுமில்லாமல் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)


«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحْيِي إِذَا رَفَعَ الْعَبْدُ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا لَا شَيْءَ فِيهِمَا»


Almujam-Alkabir-111

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

111. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள். இருபத்தி மூன்றாம் நாள் இரவில், இந்த இரவில் நம்முடன் தொழ விரும்புபவர்கள் நம்முடன் நின்று தொழலாம் என்று கூறினார்கள். அப்போது மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை (எங்களுக்குத்) தொழுகை நடத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது குதைபா ( ரலி) அவர்களும் பின்தொடர்ந்து செல்ல நானும், குதைபா ( ரலி) அவர்களுடன் நடந்து சென்று “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பி செல்லும் வரை அவருடன் தொழுதாலே போதும், அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، فَلَمَّا أَنْ كَانَ لَيْلَةُ ثَلَاثٍ وَعِشْرِينَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَقُومَ مَعَنَا هَذِهِ اللَّيْلَةَ فَلْيَقُمْ مَقَامِي، حَتَّى انْقَضَى ثُلُثُ اللَّيْلِ» ، ثُمَّ انْصَرَفَ فَمَشَيْتُ مَعَهُ إِلَى قُتَيْبَةَ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ، لَوْ قُمْتَ بِنَا هَذِهِ اللَّيْلَةَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِحَسْبِ امْرِئٍ أَنْ يَقُومَ مَعَ الْإِمَامَ حَتَّى يَنْصَرِفَ يُحْسَبُ لَهُ قِيَامُ لَيْلَةٍ»


Almujam-Alkabir-12102

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12102. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் 20 ரக்அத்களும், வித்ரும் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ»


Almujam-Alkabir-142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

142. நேர்வழிபெற்ற ஒரு முஸ்லிம், தன் நற்பண்புகளாலும் நன்னடைத்தையாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدَّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصُّوَّامِ الْقُوَّامِ بِآيَاتِ اللهِ بِحُسْنِ خُلُقِهِ وَبِكَرَمِ ضَرِيبَتِهِ»


Almujam-Alkabir-11916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11916. ஒருவர் ஓர் ஆட்டைப் படுக்க வைத்து, அதன் பக்கவாட்டில் தனது காலை வைத்து, தனது கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இதற்கு முன்பே (கத்தியைக் கூர் தீட்டி) வைத்திருக்கக் கூடாதா? இரண்டு முறை அதை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ وَاضِعٍ رِجْلَهُ عَلَى صَفْحَةِ شَاةٍ، وَهُوَ يَحُدُّ شَفْرَتَهُ، وَهِيَ تَلْحَظُ إِلَيْهِ بِبَصرِها، قَالَ: «أَفَلَا قَبْلَ هَذَا، أَوَ تُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَتَانِ»


Almujam-Alkabir-11101

ஹதீஸின் தரம்: More Info

11101. “பெண்களில் சிறந்தவர்கள் குறைந்த மஹரை (மணக்கொடை) கேட்பவர்களே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُهُنَّ أَيْسَرُهُنَّ صَدَاقًا»


Almujam-Alkabir-11100

ஹதீஸின் தரம்: More Info

11100. “பெண்களில் சிறந்தவர்கள் குறைந்த மஹரை (மணக்கொடை) கேட்பவர்களே” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُهُنَّ أَيْسَرُهُنَّ صَدَاقًا»


Almujam-Alkabir-355

ஹதீஸின் தரம்: Pending

355. …

பறவை சகுனம் பார்ப்பவனும், (தனக்காக) சகுனம் பார்க்க கூறியவனும், சோதிடம் பார்ப்பவனும், (தனக்காக)  சோதிடம் பார்க்க கூறியவனும், சூனியம் செய்பவனும், (பிறருக்கு)  சூனியம் செய்ய கூறியவனும் நம்மைச் சார்ந்தவனல்ல.


رَأَى رَجُلًا فِي عَضُدِهِ حَلْقَةً مِنَ صُفَرٍ، فَقَالَ لَهُ: مَا هَذِهِ؟ قَالَ: نُعِتَتْ لِي مِنَ الْوَاهِنَةِ قَالَ: أَمَا إِنْ مُتَّ وَهِيَ عَلَيْكَ وُكِلْتَ إِلَيْهَا، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ وَلَا تُطُيِّرَ لَهُ، وَلَا تَكَهَّنَ وَلَا تُكُهِّنَ لَهُ» أَظُنُّهُ قَالَ: «أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ»


Almujam-Alkabir-885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

885. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பத்து பேர் (கொண்ட ஒரு குழுவினர் ) வந்தபோது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தாயத் அணிந்து உள்ளார் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


أَنَّ عَشَرَةً أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُونَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ قَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَأَمْسَكْتَ عَنْ هَذَا؟ قَالَ: «إِنَّ هَذَا عَلَيْهِ تَمِيمَةٌ» فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ


Next Page » « Previous Page