Category: ஸுனன் தாரிமீ

Sunan ad-Darimi

Darimi-3354

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3354.


اقْرَءُوا الْقُرْآنَ، فَإِنَّهُ نِعْمَ الشَّفِيعُ يَوْمَ الْقِيَامَةِ. إِنَّهُ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا رَبِّ، حَلِّهِ حِلْيَةَ الْكَرَامَةِ، فَيُحَلَّى حِلْيَةَ الْكَرَامَةِ، يَا رَبِّ، اكْسُهُ كِسْوَةَ الْكَرَامَةِ فَيُكْسَى كِسْوَةَ الْكَرَامَةِ، يَا رَبِّ، أَلْبِسْهُ تَاجَ الْكَرَامَةِ، يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَلَيْسَ بَعْدَ رِضَاكَ شَيْءٌ


Darimi-2087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும்.

2087. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي ثَمَانِيَةً»


Darimi-793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தூங்கி எழும்போது என்ன செய்ய வேண்டும்?

793. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் இட வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْوَضُوءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا»


Darimi-713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

713. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Darimi-1348

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1348. ஹதீஸ் எண்-1347 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “ரப்பனா வலகல் ஹம்து” என்று இடம்பெற்றுள்ளது.


إِلَّا أَنَّهُ قَالَ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»


Darimi-1347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது கூறவேண்டியவை.

1347. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது (அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி) தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். மேலும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، فَإِذَا رَكَعَ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» وَلَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ.


Darimi-1285

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவிலும், ஸஜ்தாவிலும் இரு கைகளை உயர்த்துவது.

1285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவுக்கு செல்லும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூறி தம் இருகைகளையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே செய்வார்கள். இருஸஜ்தாவிற்கிடையிலும், அல்லது ஸஜ்தாவுக்குச் செல்லும்போதும் இவ்வாறு கைகளை உயர்த்த மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا دَخَلَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ أَوْ فِي السُّجُودِ»


Darimi-2722

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(பயணத்தில்) ஓரிடத்தில் தங்கும்போது கூறவேண்டியவை.

2722. உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. “அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: கவ்லா பின்த் ஹகீம் (ரலி)


لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا نَزَلَ مَنْزِلًا، قَالَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّهُ فِي ذَلِكَ الْمَنْزِلِ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ


Darimi-1244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அஸர் தொழுகையின் நேரம்.

1244. சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Darimi-2648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒரு சாண் நிலத்தைக் (அநியாயமாகக்) கைப்பற்றிக் கொள்பவர் (பெறும் தண்டனை).

2648. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«مَنْ ظَلَمَ مِنَ الْأَرْضِ شِبْرًا، فَإِنَّهُ يُطَوَّقُهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Next Page » « Previous Page