7338. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ‘மக்களில் யாருக்கு, ஒரு பெண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது கணவனுக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
(பிறகு நான்) ‘மக்களில் யாருக்கு, ஒரு ஆண் அதிகம் கடமைப்பட்டுள்ளார்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “தனது தாயாருக்கு (அதிகம் கடமைப்பட்டுள்ளார்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉத்பா
يَا رَسُولَ اللَّهِ مَنْ أَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الْمَرْأَةِ؟ قَالَ: «زَوْجُهَا» قُلْتُ: مَنْ أَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الرَّجُلِ؟ قَالَ «أُمُّهُ»
சமீப விமர்சனங்கள்