Category: ஹாகிம்

Hakim

Hakim-8799

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8799. ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ اللَّهَ تَعَالَى إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَهُ يَوْمَ الْقِيَامَةِ»


Hakim-1341

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1341.


وَكَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا، فَتَقَالَّ أَهْلَهَا جَزَّأَهُمْ صُفُوفًا ثَلَاثَةً فَصَلَّى بِهِمْ عَلَيْهَا، وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةً مِنَ الْمُسْلِمِينَ عَلَى جِنَازَةٍ إِلَّا أَوْجَبَتْهُ»


Hakim-1134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1134. ஹதீஸ் எண்-1131 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. (இதில் ஆரம்பத்தில் வித்ர் தொழுகை அவசியமாகும் என இடம்பெற்றுள்ளது)

 

ஹாகிம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை, ஸுஹ்ரி அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் அபூ அய்யூப் (ரலி) யின் கூற்றாக அறிவிப்பதால் புகாரி, முஸ்லிம் அவர்கள் இதை பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இது போன்ற ஹதீஸ்கள் குறைகூறப்படவேண்டியவை அல்ல.


«الْوِتْرُ حَقٌّ»

فَذَكَرَهُ بِنَحْوِهِ


Hakim-1133

ஹதீஸின் தரம்: More Info

1133. ஹதீஸ் எண்-1131 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் அபூ அய்யூப் (ரலி) யின் கூற்றாக வந்துள்ளது.


«الْوِتْرُ حَقٌّ»


Hakim-1132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1132. ஹதீஸ் எண்-1131 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


«الْوِتْرُ حَقٌّ»


Hakim-1130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1130. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் விரும்புகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمِنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Hakim-1129

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1129. “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ خَمْسٌ، أَوْ ثَلَاثٌ، أَوْ وَاحِدَةٌ»


Hakim-1128

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1128. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)

 

…….


«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Hakim-1131

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1131. “வித்ரு தொழுகை ஐந்து ரக்அத் ஆகும். ஐந்தை, நீ தொழ முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ர் தொழு ; மூன்றை, நீ தொழ முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழு ; ஒரு ரக்அத், நீ தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ» فَأَوْمِ إِيمَاءً


Hakim-1199

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1199. ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தமர்ந்து,  “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்.

பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக அஸாயிம மஃபிரதிக. வல்இஸ்மத மின் குல்லி தம்பிவ் வஸ்ஸலாமத்த மின் குல்லி இஸ்ம்” என்று கூறட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَعَدَ، فَقَالَ: ” مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى اللَّهِ، أَوْ إِلَى أَحَدٍ مِنْ بَنِي آدَمَ فَلْيَتَوَضَّأْ وَلْيُحْسِنْ وُضُوءَهُ، ثُمَّ لِيُصَلِّ رَكْعَتَيْنِ، ثُمَّ يُثْنِي عَلَى اللَّهِ، وَيُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، أَسْأَلُكَ عَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالْعِصْمَةَ مِنْ كُلِّ ذَنْبٍ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ


Next Page » « Previous Page