Category: ஹாகிம்

Hakim

Hakim-1426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1426 . இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுவதால் உங்கள் மீது குளிப்பு கடமையாகாது. உங்களில் இறந்தவர் அசுத்தமானவர் அல்ல. எனவே உங்கள் கைகளைக் கழுவிக் கொள்வதே உங்களுக்குப் போதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ عَلَيْكُمْ فِي غَسْلِ مَيِّتِكُمْ غُسْلٌ إِذَا غَسَّلْتُمُوهُ، فَإِنَّ مَيِّتَكُمْ لَيْسَ بِنَجَسٍ فَحَسْبُكُمْ أَنْ تَغْسِلُوا أَيْدِيَكُمْ»


Hakim-8598

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8598. காரிஜா பின் அஸ்ஸல்த் அல்புர்ஜுமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்களுடன் பள்ளிவாசலில் நுழைந்தேன். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே அவரும் தொழுகச் சென்றார்.

அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார். அப்போது அப்துல்லாஹ், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று கூறினார். பிறகு (தொழுகை) அணியை அடைந்(து தொழுது முடித்)தார். அவர் தொழுது முடித்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன்.

அப்போது அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தெரிவித்ததாவது:

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படும் வரை, ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு (மட்டும்) முகமன் சொல்லும் வரை, கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை, குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து, பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது. (பின்னர்) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி )


دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ الْمَسْجِدَ، فَإِذَا الْقَوْمُ رُكُوعٌ فَرَكَعَ، فَمَرَّ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، ثُمَّ وَصَلَ إِلَى الصَّفِّ، فَلَمَّا فَرَغَ سَأَلْتُهُ عَنْ قَوْلِهِ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، فَقَالَ: إِنَّهُ كَانَ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا، وَحَتَّى يُسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ بِالْمَعْرِفَةِ، وَحَتَّى تَتَّجِرَ الْمَرْأَةُ وَزَوْجُهَا، وَحَتَّى تَغْلُو الْخَيْلُ وَالنِّسَاءُ، ثُمَّ تَرْخُصَ فَلَا تَغْلُو إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Hakim-3733

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3733. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்  உடல் நடுங்கினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சாதாரணமாக இருப்பீராக! இந்த பத்ஹா பகுதியில் உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதை அறிவித்தபின்,

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். நீர் அவர்கள் மீது அடக்குமுறை செய்பவர் அல்லர். எனது எச்சரிக்கையை அஞ்சுபவருக்கு குர்ஆன் மூலம் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன் 50:45) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ» قَالَ: ثُمَّ تَلَا جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَجَلِيُّ: {وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَنْ يَخَافُ وَعِيدِ} [ق: 45]


Hakim-318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

318.

உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான்.

‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது தூதரின் வழிமுறை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல….

அறிவிப்பவர் : அம்ர் பின் அல் அஹ்வஸ்(ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَقَالَ: «قَدْ يَئِسَ الشَّيْطَانُ بِأَنْ يُعْبَدَ بِأَرْضِكُمْ وَلَكِنَّهُ رَضِيَ أَنْ يُطَاعَ فِيمَا سِوَى ذَلِكَ مِمَّا تُحَاقِرُونَ مِنْ أَعْمَالِكُمْ، فَاحْذَرُوا يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ فَلَنْ تَضِلُّوا أَبَدًا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ كُلَّ مُسْلِمٍ أَخٌ مُسْلِمٌ، الْمُسْلِمُونَ إِخْوَةٌ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مِنْ مَالِ أَخِيهِ إِلَّا مَا أَعْطَاهُ عَنْ طِيبِ نَفْسٍ، وَلَا تَظْلِمُوا، وَلَا تَرْجِعُوا مِنْ بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Hakim-1831

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1831. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இதே செய்தி அனஸ் (ரலி) அவர்களின் வழியாக (வேறு பல அறிவிப்பாளர்கள் மூலம்) அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு (ஷாஹித்) சாட்சியாகும். (பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1832)

 


«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَبْسُطَ إِلَيْهِ يَدَيْهِ، ثُمَّ يَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Hakim-1830

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1830. ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள் என  அபூ உஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஸுலைமான் தைமீ அறிவிக்கிறார்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த ஹதீஸ் இமாம் புகாரி, முஸ்லிம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.

இந்த செய்தியை அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். (பார்க்க: அடுத்த ஹதீஸ் எண்- 1831)

 


«إِنَّ اللَّهَ يَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ فِيهِمَا خَيْرًا فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


« Previous Page