Category: இப்னுமாஜா

Ibn-Majah-4259

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4259. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். பின்பு அவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்டோரில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவரே மிகச் சிறந்தவர்” என்று பதில் கூறினார்கள்.

பிறகு அவர், “இறைநம்பிக்கை கொண்டோரில் மிகவும் புத்திசாலி யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகம் நினைத்து, அதற்கு பின்னுள்ள (மறுமை) வாழ்விற்காக அழகிய முறையில் முன்னேற்பாடு செய்துக் கொண்டவரே அவர்களில் மிகவும் புத்திசாலி ஆவார்” என்று பதில் கூறினார்கள்.


كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ»


Ibn-Majah-223

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

223.

கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

நான் டமாஸ்கஸிலுள்ள ஒரு பள்ளிவாசலில் (நபித்தோழர்) அபுத்தர்தா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார். அவர், “அபுத்தர்தா! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த மதீனாவிலிருந்து உம்மிடம் வந்துள்ளேன். நீர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை அறிவிப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. அந்த நபிமொழியைக் கேட்டறிவதற்காகவே உம்மிடம் நான் வந்துள்ளேன்” என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “வேறெந்த வணிக நோக்கத்துடனும் நீர் வரவில்லையா?” என்று வினவினார்கள். அதற்கு அவர், “இல்லை” என்றார்.

“வேறெந்த நோக்கத்தோடும் வரவில்லையா?” என்று வினவ, அவர் “இல்லை” என்றார்.

அப்போது அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “யார் ஒரு பாதையில் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.

கல்வியைத் தேடும் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பால் வானவர்கள் தம் சிறகுகளைத் தாழ்த்துகின்றனர். தண்ணீரில் வாழும் மீன்கள் உள்பட வானம் பூமியிலுள்ளோர் யாவரும் கல்வியைத் தேடுபவருக்காகப் பாவமன்னிப்புக் கோருகின்றனர்.

(வழிபாடுகளில் திளைத்திருக்கும்)

كُنْتُ جَالِسًا عِنْدَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ، أَتَيْتُكَ مِنَ الْمَدِينَةِ، مَدِينَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُ بِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: فَمَا جَاءَ بِكَ تِجَارَةٌ؟ قَالَ: لَا، قَالَ: وَلَا جَاءَ بِكَ غَيْرُهُ؟ قَالَ: لَا، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ، وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ، وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، إِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا، إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»


Ibn-Majah-239

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 41

மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பவர் அடையும் நற்பலன்.

239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அறிஞர் ஒருவருக்காகக் கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில்
உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ»


Ibn-Majah-1801

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1801.


جَاءَنَا مُصَدِّقُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ: ” لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ، خَشْيَةَ الصَّدَقَةِ، فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ عَظِيمَةٍ مُلَمْلَمَةٍ، فَأَبَى أَنْ يَأْخُذَهَا، فَأَتَاهُ بِأُخْرَى دُونَهَا، فَأَخَذَهَا، وَقَالَ: أَيُّ أَرْضٍ تُقِلُّنِي، وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، إِذَا أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَخَذْتُ خِيَارَ إِبِلِ رَجُلٍ مُسْلِمٍ


Ibn-Majah-1165

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1165. ராஃபிஉ பின் கதீஜ்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)


أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا، ثُمَّ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»


Ibn-Majah-1377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا»


Ibn-Majah-617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

617.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ»


Ibn-Majah-923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 31

(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.

923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)


«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Ibn-Majah-619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«لَا يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Ibn-Majah-4273

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4273.


«إِنَّ صَاحِبَيِ الصُّورِ بِأَيْدِيهِمَا، أَوْ فِي أَيْدِيهِمَا قَرْنَانِ، يُلَاحِظَانِ النَّظَرَ مَتَى يُؤْمَرَانِ»


Next Page » « Previous Page