Category: இப்னுமாஜா

Ibn-Majah-2

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.

ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَانْتَهُوا»


Ibn-Majah-1

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

முன்னுரை:

அத்தியாயம்: 1

இறைநம்பிக்கை, நபித்தோழர்களின் சிறப்புகள், கல்வி.

பாடம்: 1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றுவது.

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு கட்டளையிட்டால்  அதை நீங்கள் கடைபிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»


Ibn-Majah-3884

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டிய பிரார்த்தனை.

3884. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அழில்ல அவ் அஸில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறும் வழமையுடையவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், சறுகி விடச் செய்யாமலும்; நான் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ مَنْزِلِهِ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Ibn-Majah-1392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1392. ஒரு (முக்கியமான) காரியம் (வெற்றிகரமாக) முடிந்தவிட்டதாக நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த அவர்கள் உடனே ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بُشِّرَ بِحَاجَةٍ فَخَرَّ سَاجِدًا»


Ibn-Majah-1394

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1394. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்தாலோ அல்லது அது குறித்து நற்செய்தி கூறப்பெற்றாலோ உடனே வளமும், உயர்வும் மிக்க அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا أَتَاهُ أَمْرٌ يَسُرُّهُ أَوْ بُشِّرَ بِهِ، خَرَّ سَاجِدًا، شُكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى»


Ibn-Majah-1222

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1222.


«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَأَحْدَثَ، فَلْيُمْسِكْ عَلَى أَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ» ،

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ قَيْسٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ


Ibn-Majah-3786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3786.


إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِصَاحِبِهَا حَتَّى غُفِرَ لَهُ: تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Ibn-Majah-995

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

995.


«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلِّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ، وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرْجَةً»


Ibn-Majah-39

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

39.


«مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ»


Ibn-Majah-3659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தை ) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»


Next Page » « Previous Page