Category: இப்னுமாஜா

Ibn-Majah-1377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا»


Ibn-Majah-617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

617.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ»


Ibn-Majah-923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 31

(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.

923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)


«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Ibn-Majah-619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«لَا يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Ibn-Majah-4273

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4273.


«إِنَّ صَاحِبَيِ الصُّورِ بِأَيْدِيهِمَا، أَوْ فِي أَيْدِيهِمَا قَرْنَانِ، يُلَاحِظَانِ النَّظَرَ مَتَى يُؤْمَرَانِ»


Ibn-Majah-3989

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3989. உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மண்ணறைக்கருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “உம்மை இவ்வாறு அழ வைத்தது எது? (என்னக் காரணம்) என்று கேட்டார்கள். அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “குறைந்த அளவான முகஸ்துதியும் இணைவைத்தலாகும். அல்லாஹ்வின் நேசரை பகைத்துக் கொள்பவர் அல்லாஹ்விடம் போர்ப் பிரகடனம் செய்தவர் ஆவார். அல்லாஹ், நல்லோர்களான; இறையச்சமுடையோர்களான; (மக்களை விட்டு) விலகி வாழ்கின்றோர்களை நேசிக்கிறான். ஒரு இடத்தில் அவர்கள் இல்லாவிட்டால் அவர்களை யாரும் தேடமாட்டார்கள். ஒரு இடத்தில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் யாராலும் அழைக்கப்பட மாட்டார்கள். யாராலும் அறியப்பட மாட்டார்கள். அவர்களின் உள்ளம் நேர்வழியின் விளக்காகும். இருள்நிறைந்த (பாவம் என்னும்) தூசிகளிலிருந்து அவர்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற இந்த செய்தி தான் என்னை அழவைத்துவிட்டது என்று கூறினார்கள்.


أَنَّهُ خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي؟ فَقَالَ: مَا يُبْكِيكَ؟ قَالَ: يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ، وَإِنَّ مَنْ عَادَى لِلَّهِ وَلِيًّا، فَقَدْ بَارَزَ اللَّهَ بِالْمُحَارَبَةِ، إِنَّ اللَّهَ يُحِبُّ الْأَبْرَارَ الْأَتْقِيَاءَ الْأَخْفِيَاءَ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا، وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا، وَلَمْ يُعْرَفُوا قُلُوبُهُمْ مَصَابِيحُ الْهُدَى، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ»


Ibn-Majah-299

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

299. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினர் ரிஜ்ஸின் நஜிஸில் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” (பொருள்: அருவருக்கத்தக்கவனும், அசுத்தமானவனும் தீயவனும், தீமையைத் தூண்டுபவனுமான விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறமுடியாதவராக ஆகிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அபுல்ஹஸன் அல்கத்தான் அவர்கள் கூறினார்கள்:

இந்த செய்தியை அபூஹாதிம் அவர்கள், இப்னு அபூமர்யம் வழியாக எங்களுக்கு அறிவித்தார்கள். அதில் “மினர் ரிஜ்ஸின் நஜிஸ்’ எனும் வாசகத்தை கூறவில்லை. (மாறாக) “மினல் கபீஸில் முக்பிஸிஷ் ஷைத்தானிர் ரஜீம்” எனும் வாசகத்தை மட்டுமே கூறினார்.


لَا يَعْجِزْ أَحَدُكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجِسِ، الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ

قَالَ أَبُو الْحَسَنِ: وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، فَذَكَرَ نَحْوَهُ، وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ: ” مِنَ الرِّجْسِ النَّجِسِ، إِنَّمَا قَالَ: مِنَ الْخَبِيثِ الْمُخْبِثِ، الشَّيْطَانِ الرَّجِيمِ


Ibn-Majah-298

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

298. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அஊது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸ்” (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»


Next Page » « Previous Page