Category: இப்னுமாஜா

Ibn-Majah-6

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (என்றென்றும்) உதவி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உலக முடிவுநாள் வரை இந்நிலையே நீடிக்கும்.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Ibn-Majah-5

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5 . (ஒருநாள்) நாங்கள் வறுமை பற்றிப் பேசிக்கொண்டும், வறுமை (ஏற்பட்டுவிடக் கூடாது என்பது) குறித்து அச்சம் தெரிவித்துக் கொண்டுமிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “வறுமை ஏற்பட்டுவிடும் என்பது குறித்தா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீது ஆணையாக! உங்களுக்கு இவ்வுலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால் (அப்போது) அந்தச் செல்வத்தைத் தவிர வேறெதுவும் உங்களின் உள்ளத்தை (நல்வழியிலிருந்து) பிறழச்செய்யாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை நான் தூய வெண்ணிற மார்க்கத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலும் சமமானவை ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் எங்களை இரவும், பகலும் சமமான தூய வெண்ணிற மார்க்கத்தில் தான் விட்டுச் சென்றார்கள்.

 


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ، فَقَالَ: «آلْفَقْرَ تَخَافُونَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا، حَتَّى لَا يُزِيغَ قَلْبَ أَحَدِكُمْ إِزَاغَةً إِلَّا هِيهْ، وَايْمُ اللَّهِ، لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»

قَالَ أَبُو الدَّرْدَاءِ: صَدَقَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكَنَا وَاللَّهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»


Ibn-Majah-4

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4 . முஹம்மத் பாக்கிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியைச் செவியுற்றால் அதைத் தாண்டிப் போகவும் மாட்டார்கள்; அதை விடக் குறைத்துவிடவும் மாட்டார்கள்.


كَانَ ابْنُ عُمَرَ «إِذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ يَعْدُهُ، وَلَمْ يُقَصِّرْ دُونَهُ»


Ibn-Majah-3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த நபிமொழி, இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


«مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ»


Ibn-Majah-260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

260.


«مَنْ تَعَلَّمَ الْعِلْمَ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ، وَيُجَارِيَ بِهِ السُّفَهَاءَ، وَيَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ، أَدْخَلَهُ اللَّهُ جَهَنَّمَ»


Ibn-Majah-259

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

259.


«لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، أَوْ لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، أَوْ لِتَصْرِفُوا وُجُوهَ النَّاسِ إِلَيْكُمْ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَهُوَ فِي النَّارِ»


Ibn-Majah-254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கற்றவர்களிடம் பெருமையடிப்பதற்காகவும், கல்லாதவர்களிடம் விவாதம் செய்வதற்காகவும் கல்வி கற்காதீர்கள். அதை வைத்துக் கொண்டு அவற்றில் சிறப்பான இடத்தைத் தேடாதீர்கள். யார் அவ்வாறு செய்கிறாரோ (அவருக்கு) நரகமே; நரகமே.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ، وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ، وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ»


Ibn-Majah-253

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

253.


«مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ، أَوْ لِيُبَاهِيَ بِهِ الْعُلَمَاءَ، أَوْ لِيَصْرِفَ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ، فَهُوَ فِي النَّارِ»


Ibn-Majah-1693

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1693. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஸஹர்’ உணவு உட்கொள்வதன் மூலம் பகல்நேர நோன்புக்கும், நண்பகல் ஓய்வு மேற்கொள்வதன் மூலம் இரவில் நின்று வழிபடுவதற்கும் உதவிதேடிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)


«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ»


Ibn-Majah-2118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2118.


أَنَّ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ رَأَى فِي النَّوْمِ أَنَّهُ لَقِيَ رَجُلًا مِنْ أَهْلِ الْكِتَابِ، فَقَالَ: نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ لَوْلَا أَنَّكُمْ تُشْرِكُونَ، تَقُولُونَ: مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ، وَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” أَمَا وَاللَّهِ، إِنْ كُنْتُ لَأَعْرِفُهَا لَكُمْ، قُولُوا: مَا شَاءَ اللَّهُ، ثُمَّ شَاءَ مُحَمَّدٌ “،

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، أَخِي عَائِشَةَ لِأُمِّهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ


Next Page » « Previous Page