Category: இப்னுமாஜா

Ibn-Majah-3255

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3255.


«إِنَّ طَعَامَ الْوَاحِدِ، يَكْفِي الِاثْنَيْنِ، وَإِنَّ طَعَامَ الِاثْنَيْنِ، يَكْفِي الثَّلَاثَةَ وَالْأَرْبَعَةَ، وَإِنَّ طَعَامَ الْأَرْبَعَةِ، يَكْفِي الْخَمْسَةَ وَالسِّتَّةَ»


Ibn-Majah-3254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும்.

3254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«طَعَامُ الْوَاحِدِ، يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ، يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ، يَكْفِي الثَّمَانِيَةَ»


Ibn-Majah-364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»


Ibn-Majah-363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

363.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ، بِيَدِهِ، وَيَقُولُ: يَا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِيَكُونَ، لَكُمُ الْمَهْنَأُ، وَعَلَيَّ الْإِثْمُ، أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»


Ibn-Majah-4024

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4024. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோது (அவர்களை நலம் விசாரிக்க) நான் சென்றேன். அப்போது அவர்கள் மீது என் கையை வைத்தேன். அவர்களின் (மீதிருந்த) போர்வையின் மேலிருந்து கூட நான் காய்ச்சலின் வெப்பத்தை உணர்ந்தேன்.

உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் இருக்கிறதே!” என்று கூறினேன். அதற்கவர்கள் ‘நாங்கள் (நபிமார்கள்) அப்படித்தான் சோதனை எங்களுக்குப் பலமடங்கு இருக்கும்; அதனால் (அல்லாஹ்வின்) கூலியும் எங்களுக்கு பலமடங்கு கிடைக்கும்’ என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகம் சோதிக்கப்பட்டோர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நபிமார்கள்” என்று பதிலளித்தார்கள். அவர்களை அடுத்து யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “நல்லோர்கள்” என்று கூறிவிட்டு,

“அவர்கள் எந்தளவிற்கு வறுமையால் சோதிக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் போர்த்திக்கொள்ளும் ஒரு ஆடையைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இருக்காது. மேலும் உங்களில் ஒருவருக்கு செல்வசெழிப்பும் வசதியும் கிடைக்கும்போது அவர் எந்தளவிற்கு மகிழ்ச்சி அடைவாரோ அது போன்று அவர்கள் சோதனைகளால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினார்கள்.


دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ، فَوَضَعْتُ يَدِي عَلَيْهِ فَوَجَدْتُ حَرَّهُ بَيْنَ يَدَيَّ فَوْقَ اللِّحَافِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَشَدَّهَا عَلَيْكَ قَالَ: «إِنَّا كَذَلِكَ يُضَعَّفُ لَنَا الْبَلَاءُ، وَيُضَعَّفُ لَنَا الْأَجْرُ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: «الْأَنْبِيَاءُ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ الصَّالِحُونَ،

إِنْ كَانَ أَحَدُهُمْ لَيُبْتَلَى بِالْفَقْرِ، حَتَّى مَا يَجِدُ أَحَدُهُمْ إِلَّا الْعَبَاءَةَ يَحُوبُهَا، وَإِنْ كَانَ أَحَدُهُمْ لَيَفْرَحُ بِالْبَلَاءِ، كَمَا يَفْرَحُ أَحَدُكُمْ بِالرَّخَاءِ»


Ibn-Majah-3721

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

நரை முடியை நீக்குவது.

3721. நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ» هُوَ نُورُ الْمُؤْمِنِ


Ibn-Majah-4341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4341. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு (மறுமையில்) இரண்டு இருப்பிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கத்தில் உள்ள இருப்பிடம். மற்றொன்று நரகத்தில் உள்ள இருப்பிடம். அவர் இறந்து நரகத்தில் நுழைந்தால் சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உள்ள அவரின் இருப்பிடத்திற்கு வாரிசாகுவார்கள். இதைப் பற்றியே “பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:10 ) என்ற அல்லாஹ்வின் சொல் குறிப்பிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தி (அல்ஹாபிழ் அபூஅப்தில்லாஹ் முஹம்மது பின் யஸீத் அல்கஸ்வீனீ என்னும்) இப்னு மாஜாவின் கடைசி செய்தியாகும்.


مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ: مَنْزِلٌ فِي الْجَنَّةِ، وَمَنْزِلٌ فِي النَّارِ، فَإِذَا مَاتَ، فَدَخَلَ النَّارَ، وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ} [المؤمنون: 10] “

وهذا آخر سنن الإمام الحافظ أبي عبد الله محمد بن يزيد القزويني.


Ibn-Majah-394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا»


Ibn-Majah-393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் கைகளைக் கழுவதற்கு முன் உளூச் செய்யும் பாத்திரத்தில் கைகளை விடலாமா?

393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ، حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ»


Next Page » « Previous Page