ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
21235. ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது வெளிப்படையில் (பார்க்கும் போது) நல்ல திடகாத்திரமான கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு நோய் ஏற்பட்டு அதன் வலியை நீ உணர்ந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், இல்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் இரு நெற்றிப்பொட்டை சுட்டிக்காட்டி “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அஸ்லம் (ரஹ்)
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ فِي المَسْجِدِ، إِذْ (1) دَخَلَ عَلَيْهِ أَعْرَابِيٌّ مُصَحَّحٌ، أَوْ قَالَ: ظَاهِرُ الصِّحَّةِ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ شَكَيْتَ قَطُّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ ضُرِبَ عَلَيْكَ هَذَانِ قَطُّ؟ وَأَشَارَ إِلَى صُدْغَيْهِ، قَالَ: لاَ، فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا.
சமீப விமர்சனங்கள்