Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-25359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25359. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا , فَلَيْسَ مِنَّا»


Musannaf-Ibn-Abi-Shaybah-7671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7671.


«أَنَّ عُمَرَ جَمَعَ النَّاسَ عَلَى أُبَيٍّ وَتَمِيمٍ فَكَانَا يُصَلِّيَانِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَقْرَآنِ بِالْمِئِينَ» يَعْنِي فِي رَمَضَانَ


Musannaf-Ibn-Abi-Shaybah-29579

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29579. கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு பசிப்பதாகக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தனது வீடுகளுக்கு சென்றார்கள். பிறகு வந்து (இந்த) முஹம்மதின் குடும்பத்தாரின் வீடுகளில் உனக்கு உணவளிக்க எதையும் நான் காணவில்லை என்று கூறினார்கள். சிறிது நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொறித்த ஆடு (அல்லது ஒரு தட்டு ஸரீத் உணவு) அன்பளிப்பாக வந்தது.

அதை நபி (ஸல்) அவர்கள், கிராமவாசியிடம் கொடுத்து சாப்பிடு! என்று கூறினார்கள். அவர் சாப்பிட்டார். பிறகு அவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்பட்ட பசிக்கு உங்கள் முன்னிலையில் அல்லாஹ் எனக்கு உணவளித்தான். நான் உங்களிடம் இல்லாதபோது எனக்கு பசி ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கூறுங்கள்” என்று கூறினார். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக, வ ரஹ்மதிக; ஃப இன்னஹூ லா யம்லிகுஹா இல்லா அன்த. (பொருள்: யா அல்லாஹ்! உனது நற்பாக்கியத்திலிருந்தும், அருளிலிருந்தும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு அதிகாரம் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை) என்று கூறு! அல்லாஹ் உனக்கு உணவளிப்பான்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: இப்ராஹீம் நகஈ (ரஹ்), முஜாஹித் (ரஹ்)


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَا إِلَيْهِ الْجُوعَ، قَالَ: فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُيُوتِهِ ثُمَّ خَرَجَ، فَقَالَ: «مَا وَجَدْتُ لَكَ فِي بُيُوتِ آلِ مُحَمَّدٍ شَيْئًا»، قَالَ: فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ جَاءَتْهُ شَاةٌ مَصْلِيَّةٌ، وَقَالَ الْآخَرُ: جَاءَتْهُ قَصْعَةٌ مِنْ ثَرِيدٍ، فَوُضِعَتْ بَيْنَ يَدَيِ الْأَعْرَابِيِّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطْعَمْ»، قَالَ: فَأَكَلَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَصَابَنِي الَّذِي أَصَابَنِي، فَرَزَقَنِي اللَّهُ عَلَى يَدَيْكَ، أَفَرَأَيْتَ إِنْ أَصَابَنِي، وَأَنَا لَسْتُ عِنْدَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهُمَا إِلَّا أَنْتَ، فَإِنَّ اللَّهَ رَازِقُكَ


Musannaf-Ibn-Abi-Shaybah-25071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25071.


مَازَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا قَتَادَةَ قَالَ: «احْذَرْ جُمَّتَكَ»، قَالَ: «لَكَ مَكَانَهَا أَسْتُرُ»، فَقَالَ لَهُ بَعْدَ ذَلِكَ: «أَكْرِمْهَا» , فَكَانَ يَتَّخِذُ لَهَا بَعْدَ ذَلِكَ السُّدَّ


Musannaf-Ibn-Abi-Shaybah-1802

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வாசனை திரவியம் பூசுவது.

2 . திருமணம் செய்வது.

3 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது)

4 . (நரைமுடிக்கு) மருதாணி இடுவது.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ التَّعْطِيرُ وَالنِّكَاحُ وَالسِّوَاكُ وَالْحِنَّاءُ


Musannaf-Ibn-Abi-Shaybah-19402

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19402.


عَجِبَ رَبُّنَا مِنْ رَجُلَيْنِ: رَجُلٌ فَارِشٌ فِرَاشَهُ وَلِحَافَهُ مِنْ بَيْنِ حِبِّهِ وَأَهْلِهِ قَامَ إِلَى صَلَاتِهِ رَغْبَةً فِيمَا عِنْدِي وَشَفَقَةً مِمَّا عِنْدِي وَرَجُلٌ غَزَا فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى فَفَرَّ أَصْحَابُهُ فَعَلِمَ مَا عَلَيْهِ فِي الْفِرَارِ وَمَا لَهُ فِي الرُّجُوعِ فَرَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ فَيَقُولُ اللَّهُ تَعَالَى لِمَلَائِكَتِهِ: يَا مَلَائِكَتِي انْظُرُوا إِلَى عَبْدِي رَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ رَغْبَةً فِيمَا عِنْدِي وَشَفَقَةً مِمَّا عِنْدِي


Next Page » « Previous Page