Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-37208

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37208. (உலகஅழிவு நாளில் ) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும் நடைபெறும் காலங்கள்) ஏழுமாதங்களாகும். இவை (ஒவ்வொன்றும் கழுத்தில்அணியும்) மணிமாலை அறுந்துவிழவது போன்று அடுத்தடுத்து தொடராக நிகழ்ந்துவிடும் என மக்ஹூல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)


«مَا بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْقُسْطَنْطِينِيَّةِ وَخُرُوجِ الدَّجَّالِ إِلَّا سَبْعَةَ أَشْهُرٍ , وَمَا ذَاكَ إِلَّا كَهَيْئَةِ الْعِقْدِ يَنْقَطِعُ فَيَتْبَعُ بَعْضُهُ بَعْضًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-37477

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையைால், யாரிடம் இந்த செய்தியை கூறினார்களோ அவரை (அதாவது முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய என்னுடைய) தோளில் அடித்துவிட்டு  முஆதே! நீ இங்கே அமர்ந்திருப்பது எப்படி உண்மையோ அது போன்று மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்று கூறினார்கள்)

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில்-     தொடையிலோ அல்லது தோளிலோ அடித்துவிட்டு என்று சந்தேகமாக அறிவிக்கிறார்.


عِمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ , وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ , وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ ثُمَّ يَضْرِبُ بِيَدِهِ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ أَوْ مَنْكِبَيْهِ , ثُمَّ قَالَ: إِنَّ هَذَا هُوَ الْحَقُّ كَمَا أَنَّكَ هَاهُنَا , أَوْ كَمَا أَنْتَ قَاعِدٌ يَعْنِي مُعَاذًا


Musannaf-Ibn-Abi-Shaybah-37209

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

37209. ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும் என்று முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்பு ஒரு மனிதரின் தோளில் அடித்துவிட்டு மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மக்ஹூல் (ரஹ்)


عِمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ , وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ , وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ , ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِ رَجُلِ وَقَالَ: وَاللَّهِ إِنَّ ذَلِكَ لَحَقٌّ


Musannaf-Ibn-Abi-Shaybah-17316

ஹதீஸின் தரம்: More Info

17316. (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராக இல்லாத பெண், என் தலையை கழுவிவிடுவதை விட உங்களில் ஒருவர் என் தலையை இரும்பு ஊசியால் குத்தி காயப்படுத்துவது எனக்கு மிக விருப்பமானதாகும் என மஃகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அலாஉ-யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)  


«لَأَنْ يَعْمِدَ أَحَدُكُمْ إِلَى مِخْيَطٍ فَيَغْرِزُ بِهِ فِي رَأْسِي، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَغْسِلَ رَأْسِيَ امْرَأَةٌ لَيْسَتْ مِنِّي ذَاتَ مَحْرَمٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


«أَلَا أُنَبِّئُكُمْ بِأَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29451

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29451. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29438. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ، غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29416

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29416. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் அல்லது ஏதோ ஒரு மரம்  நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، غُرِسَ لَهُ نَخْلَةٌ، أَوْ شَجَرَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29189

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

29189. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் அதிகமாக மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


«لَوْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ كَانَ أَكْثَرُ دُعَائِي فِيهَا أَسْأَلُ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29187

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

29187. லைலத்துல் கத்ர் இரவு எந்த இரவு என்பதை நான் அறிந்தால் அதில் அல்லாஹ்விடம் உடல் ஆரோக்கியத்தை தான் நான் கேட்பேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானிஃ (ரஹ்)


«لَوْ عَرَفْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا سَأَلْتُ اللَّهَ فِيهَا إِلَّا الْعَافِيَةَ»


Next Page » « Previous Page