Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-21297

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21297. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் கையை பிடித்து கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட தஜ்ஜால் அல்லாதவர்கள் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என்று கூறியதை செவியேற்றேன்.

நான் வீட்டை அடைந்தபின் உள்ளே செல்ல பயந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜாலை விட உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்தது எது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.


كُنْتُ مُخَاصِرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا إِلَى مَنْزِلِهِ، فَسَمِعْتُهُ يَقُولُ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُ عَلَى أُمَّتِي مِنَ الدَّجَّالِ» فَلَمَّا خَشِيتُ أَنْ يَدْخُلَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ شَيْءٍ أَخْوَفُ عَلَى أُمَّتِكَ مِنَ الدَّجَّالِ؟ قَالَ: «الْأَئِمَّةَ الْمُضِلِّينَ»


Musnad-Ahmad-21296

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21296. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜால் அல்லாதவர்களும் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என மூன்று தடவைக் கூறினார்கள்.

அதற்கு நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்த தஜ்ஜால் அல்லாதவர்கள் யார்? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.


كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَغَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَى أُمَّتِي» قَالَهَا ثَلَاثًا. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا الَّذِي غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: «أَئِمَّةً مُضِلِّينَ»


Musnad-Ahmad-22093

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22093. ஐந்து செயல்களை செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள்.

1 . நோயாளியை நலம் விசாரிப்பவர்.

2 . ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்பவர்.

3 . அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போருக்கு செல்பவர்.

4 . (முஸ்லிம்) தலைவரைக் கண்ணியப்படுத்தவும், பலப்படுத்தவும் அவரின் ஆதிக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவர்.

5 . தனது வீட்டில் அமர்ந்து, அதனால் அவரது பிரச்சனையிலிருந்து மக்களும், மக்களின் பிரச்சனையிலிருந்து அவரும் பாதுகாப்பு பெற்றுக் கொண்டவர்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ: «مَنْ عَادَ مَرِيضًا، أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ، أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ، أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ»


Musnad-Ahmad-16296

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16296.


أَنَّ أَبَاهُ طَلْقَ بْنَ عَلِيٍّ أَتَانَا فِي رَمَضَانَ وَكَانَ عِنْدَنَا حَتَّى أَمْسَى، فَصَلَّى بِنَا الْقِيَامَ فِي رَمَضَانَ، وَأَوْتَرَ بِنَا، ثُمَّ انْحَدَرَ إِلَى مَسْجِدِ رَيْمَانَ فَصَلَّى بِهِمْ حَتَّى بَقِيَ الْوَتْرُ، فَقَدَّمَ رَجُلًا فَأَوْتَرَ بِهِمْ وَقَالَ: سَمِعْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ»


Musnad-Ahmad-2780

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2780.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى مَعَ رَجُلٍ، وَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ» ، فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ، خَرَقَهُ – قَالَ: فَحَسِبْتُ أَنَّ ابْنَ الْمُسَيِّبِ قَالَ: – «فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ»


Musnad-Ahmad-2184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2184. நபி (ஸல்) அவர்கள், (பாரசீக மன்னர் ‘குஸ்ரூ’ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதைக் கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள். பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:
‘எனவே, நபி (ஸல்) அவர்கள் , ‘கிஸ்ரா’ ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்’ என்று ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) சொன்னதாக நினைக்கிறேன்.


بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَبْدَ اللَّهِ بْنَ حُذَافَةَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى، فَدَفَعَهُ إِلَى عَظِيمِ الْبَحْرَيْنِ، يَدْفَعُهُ عَظِيمُ الْبَحْرَيْنِ إِلَى كِسْرَى، – قَالَ يَعْقُوبُ: فَدَفَعَهُ عَظِيمُ الْبَحْرَيْنِ، إِلَى كِسْرَى – فَلَمَّا قَرَأَهُ مَزَّقَهُ “

قَالَ ابْنُ شِهَابٍ: فَحَسِبْتُ ابْنَ الْمُسَيِّبِ قَالَ: ” فَدَعَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِأَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ


Next Page » « Previous Page