தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1876

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்ட எந்தவொரு முஸ்லிம் பெற்றோரையும், அல்லாஹ் தனது அளப்பரிய அருளால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மரணித்த குழந்தைகளிடம்), ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் பெற்றோர்கள் வரும் வரை (நாங்கள் நுழைய மாட்டோம்)’ என்று கூறுவார்கள். மீண்டும் அவர்களிடம், ‘நீங்களும் உங்கள் பெற்றோர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(நஸாயி: 1876)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ ابْنِ عُلَيَّةَ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا إِسْحَقُ وَهُوَ الْأَزْرَقُ، عَنْ عَوْفٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ بَيْنَهُمَا ثَلَاثَةُ أَوْلَادٍ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمُ الْجَنَّةَ»، قَالَ: ” يُقَالُ لَهُمْ: ادْخُلُوا الْجَنَّةَ، فَيَقُولُونَ: حَتَّى يَدْخُلَ آبَاؤُنَا، فَيُقَالُ: ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَآبَاؤُكُمْ “


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1876.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.