Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-25328

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25328. நான் நபி (ஸல்) அவர்களிடம்),  பெண்களும் அறப்போர் புரிவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجِهَادِ؟ فَقَالَ: «بِحَسْبِكُنَّ الْحَجُّ» أَوْ قَالَ: «جِهَادُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-25325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25325. நபி (ஸல்) அவர்களிடம், அவர்களின் மனைவிமார்களாகிய நாங்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டோம். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ، فَقَالَ: «حَسْبُكُنَّ الْحَجُّ، أَوْ جِهَادُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-24888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களின் அறப்போர், இந்த இறையில்லமான கஃபாவை ஹஜ் செய்வது தான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«جِهَادُ النِّسَاءِ حَجُّ هَذَا الْبَيْتِ»


Musnad-Ahmad-24497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24497. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (பெண்களாகிய) நாங்கள் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களுக்கு) சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ்ஜாகும்!’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை!’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نُجَاهِدُ مَعَكَ؟ فَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِ أَحْسَنُ الْجِهَادِ، وَأَجْمَلُهُ الْحَجُّ، حَجٌّ مَبْرُورٌ» فَقَالَتْ عَائِشَةُ: «فَلَا أَدَعُ الْحَجَّ أَبَدًا بَعْدَ إذ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musnad-Ahmad-24463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24463. ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அறப்போர் புரிவது பெண்கள் மீது கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வதும் உம்ரா செய்வதும் தான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்)


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَعَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: «الْحَجُّ وَالْعُمْرَةُ، هُوَ جِهَادُ النِّسَاءِ»


Musnad-Ahmad-24422

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24422. ஆயிஷா(ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (பெண்களாகிய) நாங்களும் உங்களுடன் வந்து அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா பின்த் தல்ஹா (ரஹ்)


يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَخْرُجُ نُجَاهِدُ مَعَكُمْ، قَالَ: «لَا، جِهَادُكُنَّ الْحَجُّ الْمَبْرُورُ، هُوَ لَكُنَّ جِهَادٌ»


Musnad-Ahmad-24393

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களாகிய) நீங்கள் வீட்டிலேயே இருந்துங் கொள்ளுங்கள். அதுவே உங்களின் ஜிஹாத் ஆகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«عَلَيْكُنَّ بِالْبَيْتِ، فَإِنَّهُ جِهَادُكُنَّ»


Musnad-Ahmad-24383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24383. இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார்.

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்களாகிய நாங்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டோம். அதற்கவர்கள், ‘உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ அல்லது “உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும்” என்றோ கூறினார்கள்.


اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ، فَقَالَ: «جِهَادُكُنَّ، أَوْ حَسْبُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-23937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23937. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.

பின்பு அவருக்கும், மற்றவர்களுக்கும் “உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை கேட்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)


سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي الصَّلَاةِ، وَلَمْ يَذْكُرِ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا» ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ وَلِغَيْرِهِ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ، ثُمَّ لِيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ»


Musnad-Ahmad-10874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10874. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»


Next Page » « Previous Page