21507. பிலாலே! அதிகாலை, அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) வெண்மை தெரியும் நேரம் நீ ஸஹர் பாங்கு கூறுவீராக! அது (ஸுப்ஹு தொழுகை நேரம் அல்ல). அகலவாக்கில் வெண்மை பரவும் நேரம்தான் ஸுப்ஹு தொழுகை நேரமாகும் என்று பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு ஸஹர் உணவை வரவழைத்து ஸஹர் செய்தார்கள்.
மேலும், ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி, நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «أَنْتَ يَا بِلَالُ تُؤَذِّنُ إِذَا كَانَ الصُّبْحُ سَاطِعًا فِي السَّمَاءِ، فَلَيْسَ ذَلِكَ بِالصُّبْحِ، إِنَّمَا الصُّبْحُ هَكَذَا مُعْتَرِضًا» ثُمَّ دَعَا بِسَحُورِهِ فَتَسَحَّرَ، وَكَانَ يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا أَخَّرُوا السَّحُورَ، وَعَجَّلُوا الْفِطْرَ»
சமீப விமர்சனங்கள்