Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-25742

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25742. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்” என்று கூறினார்கள்.


دُعِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ غُلَامٍ مِنَ الْأَنْصَارِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، لَمْ يُدْرِكِ الشَّرَّ، وَلَمْ يَعْمَلْهُ، قَالَ: أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا، خَلَقَهَا لَهُمْ، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا، خَلَقَهَا لَهُمْ، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»


Musnad-Ahmad-24132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24132.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ صَبِيًّا لِلْأَنْصَارِ لَمْ يَبْلُغِ السِّنَّ عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ؟ قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ، خَلَقَ اللَّهُ الْجَنَّةَ، وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَ النَّارَ، وَخَلَقَ لَهَا أَهْلًا، وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ»


Musnad-Ahmad-19109

ஹதீஸின் தரம்: More Info

19109. முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) மரணித்திருக்கமாட்டார் என இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்)


«لَوْ كَانَ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ مَا مَاتَ ابْنُهُ إِبْرَاهِيمُ»


Musnad-Ahmad-12102

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12102. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார்.

(அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தை இப்ராஹீம் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்ராஹீம் என் புதல்வர். பால்குடிப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு அவரது பால்குடித் தவணையை முழுமையாக்கும் செவிலித் தாய்மார்கள் இருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.


مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَرْحَمَ بِالْعِيَالِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِبْرَاهِيمُ مُسْتَرْضَعًا فِي عَوَالِي الْمَدِينَةِ، فَكَانَ يَنْطَلِقُ وَنَحْنُ مَعَهُ، فَيَدْخُلُ الْبَيْتَ وَإِنَّهُ لَيُدَّخَنُ، وَكَانَ ظِئْرُهُ قَيْنًا، فَيَأْخُذُهُ فَيُقَبِّلُهُ ثُمَّ يَرْجِعُ، قَالَ عَمْرٌو: فَلَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ إِبْرَاهِيمَ ابْنِي، وَإِنَّهُ مَاتَ فِي الثَّدْيِ، وَإِنَّ لَهُ ظِئْرَيْنِ يُكْمِلَانِ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18705. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) பால்குடிமறவாத 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள், இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை நிறைவு செய்யும் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ ابْنٌ لَهُ، ابْنَ سِتَّةَ عَشَرَ شَهْرًا، وَهُوَ رَضِيعٌ. قَالَ: يَحْيَى أُرَاهُ إِبْرَاهِيمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُتِمُّ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18624. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள், அவரை ஜன்னத்துல் பகீஉ எனும் மையவாடியில் அடக்கம் செய்ய கூறினார்கள். இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை  நிறைவு செய்யும் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


تُوُفِّيَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ابْنَ سِتَّةَ عَشَرَ شَهْرًا، فَقَالَ: «ادْفِنُوهُ بِالْبَقِيعِ، فَإِنَّ لَهُ مُرْضِعًا يُتِمُّ رَضَاعَهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18551

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18551. (நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


 أَنَّهُ قَالَ فِي ابْنِهِ إِبْرَاهِيمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُرْضِعُهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18550. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) 16 மாத குழந்தையாக இருக்கும் போது மரணித்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள், அவரை ஜன்னத்துல் பகீஉ எனும் மையவாடியில் அடக்கம் செய்ய உத்தவிட்டார்கள். இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ سِتَّةَ عَشَرَ شَهْرًا، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُدْفَنَ فِي الْبَقِيعِ وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا يُرْضِعُهُ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18502. (நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது) நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


«لِإِبْرَاهِيمَ مُرْضِعٌ فِي الْجَنَّةِ»


Musnad-Ahmad-18497

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18497. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 16 மாதத்தில் மரணித்த போது அவருக்கு  நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் இவரின் பால்குடியை நிறைவு செய்யும்  பாலூட்டும் அன்னை உண்டு; இவர் உண்மையாளர்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ وَمَاتَ، وَهُوَ ابْنُ سِتَّةَ عَشَرَ شَهْرًا، وَقَالَ: «إِنَّ لَهُ فِي الْجَنَّةِ مَنْ تُتِمُّ رَضَاعَهُ وَهُوَ صِدِّيقٌ»


Next Page » « Previous Page