Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-17103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17103. ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)


«لَا تُجْزِئُ صَلَاةٌ لِأَحَدٍ لَا يُقِيمُ فِيهَا ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Musnad-Ahmad-23489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23489. நபி (ஸல்) அவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் நாளின் உரையில் கூறியதாவது:

மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை.

ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர.

நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித நாள்” எனக் கூறினர். பிறகு “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித மாதம்” எனக் கூறினர். பிறகு அவர்கள் “இது எந்த நகரம்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித நகரம்” எனக் கூறினர்.

அப்போது, “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், மானத்தையும் அல்லாஹ் புனிதமாக ஆக்கியுள்ளான். நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்)

«يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ» ، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ،

ثُمَّ قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا؟» ، قَالُوا: يَوْمٌ حَرَامٌ، ثُمَّ قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟» ، قَالُوا: شَهْرٌ حَرَامٌ، قَالَ: ثُمَّ قَالَ: «أَيُّ بَلَدٍ هَذَا؟» ، قَالُوا بَلَدٌ حَرَامٌ، قَالَ: «فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ» ـ قَالَ: وَلَا أَدْرِي قَالَ: أَوْ أَعْرَاضَكُمْ، أَمْ لَا ـ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ “، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، قَالَ: «لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ»


Musnad-Ahmad-21935

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21935. “நான், என்னிடம் வந்த ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு விட்டேன்” என்று ஒருவர் கூறினார். விபச்சாரம் புரிந்த அந்த மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தகவல் தெரிவித்த ஸஹாபாக்கள், “அவரை உங்களிடம் தூக்கிக் கொண்டு வந்தால் அவருடைய எலும்புகள் நொறுங்கிப் போய்விடும் அளவுக்குக் கடும் நோய் வாய்ப்பட்டவராக அவர் இருக்கிறார்” என்றும் “இவருக்கு ஏற்பட்டுள்ளது போன்ற துன்பம் வேறு எந்த மனிதருக்கும் ஏற்பட்டதாக நாங்கள் கருதவில்லை” என்றும் “எலும்பில் தோல் மட்டுமே உள்ளது” (சதையே இல்லை) என்றும் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 100 குச்சிகளை எடுத்து அவற்றைக் கொண்டு ஓர் அடி அடிக்குமாறு கட்டளையிட்டார்கள்.


كَانَ بَيْنَ أَبْيَاتِنَا إِنْسَانٌ مُخْدَجٌ ضَعِيفٌ، لَمْ يُرَعْ أَهْلُ الدَّارِ إِلَّا وَهُوَ عَلَى أَمَةٍ مِنْ إِمَاءِ الدَّارِ يَخْبُثُ بِهَا، وَكَانَ مُسْلِمًا، فَرَفَعَ شَأْنَهُ سَعْدٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” اضْرِبُوهُ حَدَّهُ ” قَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّهُ أَضْعَفُ مِنْ ذَلِكَ، إِنْ ضَرَبْنَاهُ مِائَةً قَتَلْنَاهُ قَالَ: ” فَخُذُوا لَهُ عِثْكَالًا فِيهِ مِائَةُ شِمْرَاخٍ، فَاضْرِبُوهُ بِهِ ضَرْبَةً وَاحِدَةً، وَخَلُّوا سَبِيلَهُ


Musnad-Ahmad-1597

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1597. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாடு தனது நாவால் (இழுத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை (மூலதனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)

 


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا يَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا»


Musnad-Ahmad-11792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11792 . …விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது…


عَدَا الذِّئْبُ عَلَى شَاةٍ، فَأَخَذَهَا فَطَلَبَهُ الرَّاعِي، فَانْتَزَعَهَا مِنْهُ، فَأَقْعَى الذِّئْبُ عَلَى ذَنَبِهِ، قَالَ : أَلَا تَتَّقِي اللَّهَ، تَنْزِعُ مِنِّي رِزْقًا سَاقَهُ اللَّهُ إِلَيَّ، فَقَالَ: يَا عَجَبِي ذِئْبٌ مُقْعٍ عَلَى ذَنَبِهِ، يُكَلِّمُنِي كَلَامَ الْإِنْسِ، فَقَالَ الذِّئْبُ: أَلَا أُخْبِرُكَ بِأَعْجَبَ مِنْ ذَلِكَ؟ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَثْرِبَ يُخْبِرُ النَّاسَ بِأَنْبَاءِ مَا قَدْ سَبَقَ، قَالَ: فَأَقْبَلَ الرَّاعِي يَسُوقُ غَنَمَهُ، حَتَّى دَخَلَ الْمَدِينَةَ، فَزَوَاهَا إِلَى زَاوِيَةٍ مِنْ زَوَايَاهَا، ثُمَّ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُودِيَ الصَّلَاةُ جَامِعَةٌ، ثُمَّ خَرَجَ، فَقَالَ لِلرَّاعِي: «أَخْبِرْهُمْ» فَأَخْبَرَهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ»


Musnad-Ahmad-10724

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10724. …கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்…


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَتَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ» قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: «الْقَتْلُ»


Musnad-Ahmad-14020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14020. மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Musnad-Ahmad-13404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13404. மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Musnad-Ahmad-12537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12537. மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Musnad-Ahmad-12473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12473. மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது ஏற்படும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ  حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ»


Next Page » « Previous Page