Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

858.


أَنَّهُ سَمِعَ أَهْلَ الْعِلْمِ يَنْهَوْنَ أَنْ يُصَامَ الْيَوْمُ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ شَعْبَانَ، إِذَا نُوِيَ بِهِ صِيَامَ رَمَضَانَ، وَيَرَوْنَ أَنَّ عَلَى مَنْ صَامَهُ عَلَى غَيْرِ رُؤْيَةٍ، ثُمَّ جَاءَ الثَّبَتُ أَنَّهُ مِنْ رَمَضَانَ، أَنَّ عَلَيْهِ قَضَاءَهُ، وَلاَ يَرَوْنَ بِصِيَامِهِ تَطَوُّعًا بَأْسًا.
قَالَ مالِكٌ: وَهَذَا الأَمْرُ عِنْدَنَا، وَالَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا.


Muwatta-Malik-527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 128

மஸ்ஜிதுந் நபவீ-மதீனா பள்ளிவாசலின் சிறப்பு

527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا، خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ.


Muwatta-Malik-1443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1443.


وَزَنَتْ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ شَعَرَ حَسَنٍ وَحُسَيْنٍ، فَتَصَدَّقَتْ بِزِنَتِهِ فِضَّةً.


Muwatta-Malik-1442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1442.


أَنَّهُ قَالَ: وَزَنَتْ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ شَعَرَ حَسَنٍ وَحُسَيْنٍ، وَزَيْنَبَ، وَأُمِّ كُلْثُومٍ، فَتَصَدَّقَتْ بِزِنَةِ ذَلِكَ فِضَّةً.


Muwatta-Malik-1351

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1351. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ وَلَمْ تَقْضِهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: اقْضِهِ عَنهَا


Muwatta-Malik-2261

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 8

இறந்தவருக்காக உயிருள்ளவர், அடிமையை உரிமை விடுதல்.

2261. அப்துர்ரஹ்மான் பின் அபூஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது தாயார் வஸிய்யத் செய்ய நாடினார். இயலாமையால் அதை செய்யவில்லை. அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர்களின் விருப்பம் ஒரு அடிமையை விடுதலை செய்வதாக இருந்தது. எனவே நான் காஸிம் பின் முஹம்மது அவர்களிடம், நான் அடிமையை உரிமைவிட்டால் எனது தாயாருக்கு அதன் நன்மை பயனளிக்குமா என்று கேட்டேன்.

அதற்கு காஸிம் அவர்கள் (இப்படித்தான்) ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் அடிமையை உரிமை விட்டால் அவருக்கு நன்மை கிடைக்குமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள் என்று பதிலளித்தார்கள்.


أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تُوصِيَ، ثُمَّ أَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ، فَهَلَكَتْ، وَقَدْ كَانَتْ هَمَّتْ بِأَنْ تُعْتِقَ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا، فَقَالَ الْقَاسِمُ: إِنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّ أُمِّي هَلَكَتْ، فَهَلْ يَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: نَعَمْ.


Muwatta-Malik-651

ஹதீஸின் தரம்: More Info

651. ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்’ என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)


أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُمْ إِلَيْهِ، أَوْ شَرٌّ تَضَعُونَهُ عَن رِقَابِكُمْ


Muwatta-Malik-3338

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3338. நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ


Muwatta-Malik-2641

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பளிப்பு செய்துக் கொள்ளுங்கள், நீங்கள் அன்பு கொள்வீர்கள், பொறாமை நீங்கி விடும்.

 


«تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ، وَتَهَادَوْا تَحَابُّوا، وَتَذْهَبِ الشَّحْنَاءُ»


Muwatta-Malik-744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

744. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)


«أَتَانِي جِبْرِيلُ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي – أَوْ مَنْ مَعِي – أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّلْبِيَةِ أَوْ بِالْإِهْلَالِ» يُرِيدُ أَحَدَهُمَا.


Next Page » « Previous Page