Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-451

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 105

தொழுகையில் அவசியம் ஏற்பட்டால் திரும்புவது, கை தட்டுவது

451. நபி (ஸல்) அவர்கள் அம்ரு இப்னு அவ்ஃபு (ரலி) அவர்களின் குடும்பத்தாரிடையே சமாதானப்படுத்துவதற்காக அவர்களிடம் சென்று விட்டார்கள். அதுசமயம் தொழுகை நேரம் வந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் முஅத்தின் வந்து, நான் இகாமத் கூறுகிறேன். மக்களுக்கு தொழ வைக்கின்றீர்களா? எனக் கேட்டார். சரி என்று கூறிய அபூபக்கர் (ரலி) தொழ வைத்தார்கள். மக்கள் தொழுகையில் இருக்கும் போது நபி(ஸல்) அவா்கள் வந்தார்கள். ஸஃப்பில் (வாரிசையில்) நிற்பதற்காக ஊடுறுவினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வருகையை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) மக்கள் கையொலி எழுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் தொழுகையில் இருந்து திரும்பிப் பார்க்காதவர்களாக இருந்தார்கள். மக்களின் கரவொலி அதிகமானதுமே அபூபக்கர் (ரலி) திரும்பி, நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். ”நீர் உன் இடத்தில் நிற்பீராக”” என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் கைகளை உயர்த்தி, நபி (ஸல்) அவர்கள் தன்னை (தொழ வைக்க) கட்டளையிட்டதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு பின்வாங்கி வந்து (ஸஃப்பில்) சரிசமமாக நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கிப் போய் தொழ வைத்தார்கள்.

பின்பு தொழுது

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ. وَحَانَتِ الصَّلَاةُ. فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ. فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ فِي الصَّلَاةِ. فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ. فَصَفَّقَ النَّاسُ. وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ. فَلَمَّا أَكْثَرَ النَّاسُ مِنَ التَّصْفِيقِ، الْتَفَتَ أَبُو بَكْرٍ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِ امْكُثْ مَكَانَكَ». فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ. وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، ثُمَّ انْصَرَفَ. فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ»، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ، أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ مِنَ التَّصْفِيحِ؟ مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ. فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيحُ لِلنِّسَاءِ»


muwatta-malik-450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

450. (ஸஜ்தாவின் போது) நெற்றியை பூமியில் வைத்தால் அதை வைக்கும் இடத்தில் தன் உள்ளங்கைகளை வைக்கட்டும். பின்பு நெற்றியை உயர்த்தினால் கைகளையும் உயர்த்தட்டும். ஏனென்றால் முகம் ஸஜ்தா செய்வத போன்றே இரு கைகளும் ஸஜ்தா செய்கின்றன என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


«مَنْ وَضَعَ جَبْهَتَهُ بِالْأَرْضِ، فَلْيَضَعْ كَفَّيْهِ عَلَى الَّذِي يَضَعُ عَلَيْهِ جَبْهَتَهُ، ثُمَّ إِذَا رَفَعَ، فَلْيَرْفَعْهُمَا. فَإِنَّ الْيَدَيْنِ تَسْجُدَانِ كَمَا يَسْجُدُ الْوَجْهُ»


muwatta-malik-449

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 104

ஸஜ்தாவில் முகத்தை வைக்கும் இடத்தில் கைகளை வைத்தல்

449. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஸஜ்தா செய்தால் தன் முகத்தை எதன் மீது வைக்கின்றார்களோ அதன் மீது உள்ளங்கைகளை வைப்பார்கள். கடும் குளிர் காலத்தில் மணல் பகுதியில் (தன் உள்ளங்கைகளை) வைப்பதற்காக ”பர்னஸ்”” என்ற ஆடையில் இருந்து அவ்விரண்டையும் வெளியாக்குவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سَجَدَ وَضَعَ كَفَّيْهِ عَلَى الَّذِي يَضَعُ عَلَيْهِ جَبْهَتَهُ، قَالَ نَافِعٌ، وَلَقَدْ رَأَيْتُهُ فِي يَوْمٍ شَدِيدِ الْبَرْدِ وَإِنَّهُ «لَيُخْرِجُ كَفَّيْهِ مِنْ تَحْتِ بُرْنُسٍ لَهُ حَتَّى يَضَعَهُمَا عَلَى الْحَصْبَاءِ»


muwatta-malik-448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

448. பள்ளியில் நுழைந்தால் தொழும் முன் உட்காருவதை உமது தோழாரிடம் நான் பார்க்கின்றேன் அல்லவா? என்று அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் என் தோழர் என்று குறிப்பிட்டது, உமர் இப்னு உபைதுல்லா அவர்களைத் தான். அவர்கள் தான் இவ்வாறு ”பள்ளியில் நுழைந்து தொழும் முன்னால் உட்கார்வதை குறை கண்டார்”” என அபுந் நள்ர் (உமர் இப்னு உபைதுல்லாஹ் அவர்களின் அடிமை) கூறுகின்றார்கள்.

‘இது நல்ல நடைமுறை. ஆனால் கட்டாயமல்ல என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّهُ قَالَ لَهُ: ” لَمْ أَرَ صَاحِبَكَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَجْلِسُ قَبْلَ أَنْ يَرْكَعَ؟ قَالَ أَبُو النَّضْرِ يَعْنِي بِذَلِكَ عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَيَعِيبُ ذَلِكَ عَلَيْهِ، أَنْ يَجْلِسَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَبْلَ أَنْ يَرْكَعَ

قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «وَذَلِكَ حَسَنٌ، وَلَيْسَ بِوَاجِبٍ»


muwatta-malik-447

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

447. உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்தால் உட்காரும் முன் இரண்டு ரக்அத் தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).


«إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، قَبْلَ أَنْ يَجْلِسَ»


muwatta-malik-446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

446. பாங்கு கூறிய பின் பள்ளியில் இருந்து மீண்டும் வர விரும்புபவனைத் தவிர, முனாபிக்கைத் தவிர வேறு யாரும் வெளியேற வேண்டாம் என சொல்லப்பட வேண்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


يُقَالُ ” لَا يَخْرُجُ أَحَدٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ النِّدَاءِ، إِلَّا أَحَدٌ يُرِيدُ الرُّجُوعَ إِلَيْهِ، إِلَّا مُنَافِقٌ


muwatta-malik-445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

445. அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்தை உயர்த்துகின்ற காரியங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அவைகள்) கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளுச் செய்வது, பள்ளியின் பக்கம் அதிமாக நடந்து வருவது, தொழுகைக்குப் பின் மறுதொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறி விட்டு,இது தான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).


«أَلَا أُخْبِرُكُمْ بِمَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟ إِسْبَاغُ الْوُضُوءِ عِنْدَ الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ. فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ، فَذَلِكُمُ الرِّبَاطُ»


muwatta-malik-444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

444. உங்களில் ஒருவர் தொழுது, பின்பு தொழுத இடத்திலேயே அமர்ந்திருந்தால், ” இறைவா! இவரை மன்னிப்பாயாக! அவருக்கு அருள்புரிவாயாக”” என்று வானவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.அவர் தன் தொழுமிடத்தை விட்டும் எழுந்து, அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராக பள்ளி யில் உட்கார்ந்திருந்தால், அவர்(அடுத்த தொழுகையை) தொழும் வரை தொழுகையில் இருப்பவர் போலாவார் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக, நுஐம் இப்னு அப்தில்லாஹ் அல் முஜ்மில் கூறுகின்றார்கள்.


إِذَا صَلَّى أَحَدُكُمْ، ثُمَّ جَلَسَ فِي مُصَلَّاهُ، لَمْ تَزَلِ الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَيْهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ. فَإِنْ قَامَ مِنْ مُصَلَّاهُ، فَجَلَسَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلَاةَ، لَمْ يَزَلْ فِي صَلَاةٍ حَتَّى يُصَلِّيَ


muwatta-malik-443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

443. நல்லதைக் கற்கவேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே ஒருவர், காலையில் அல்லது மாலையில் பள்ளிவாசலுக்கு வந்து, பிறகு தன் வீட்டுக்குச் சென்றால், அவர் (இறைவழியில் போரிட்டு வெற்றி பெற்று) போர்ச்செல்வங்களுடன் திரும்பி வரும் போராளியைப் போன்றவர் ஆவார் என்று அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸுமைய் (ரஹ்)


«مَنْ غَدَا أَوْ رَاحَ إِلَى الْمَسْجِدِ، لَا يُرِيدُ غَيْرَهُ، لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، ثُمَّ رَجَعَ إِلَى بَيْتِهِ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، رَجَعَ غَانِمًا»


muwatta-malik-442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

442. தொழுகை ஒருவரை (பள்ளியிலேயே) தடுத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார். (அதாவது) அவர் தன் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வதை விட்டும் தொழுகையே தவிர வேறெதுவும் அவரைத் தடுக்கவில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது. இதன் கருத்து அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யிலும் இடம் பெற்றுள்ளது).


«لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ، لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ»


Next Page » « Previous Page