Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-249

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

249. நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத் தொழுகை ஒன்றில் லுஹரை அல்லது அஸரை இரண்டு ரக்அத்துக்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்பவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டதா? அல்லது மறந்தீர்களா? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், தொழுகை குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அது போலவே நடந்தது ன்று துல்யதைன் கூறினார். நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, துல்யதைன் உண்மை கூறுகிறாரா? என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட தொழுகையை முழுமைப்படுத்தினார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹஸ்மா கூறுகிறார்.


بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكَعَ رَكْعَتَيْنِ مِنْ إِحْدَى صَلَاتَيِ النَّهَارِ: الظُّهْرِ أَوِ الْعَصْرِ. فَسَلَّمَ مِنَ اثْنَتَيْنِ. فَقَالَ لَهُ ذُو الشِّمَالَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَصُرَتِ الصَّلَاةُ وَمَا نَسِيتُ»، فَقَالَ ذُو الشِّمَالَيْنِ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ ثُمَّ سَلَّمَ


muwatta-malik-248

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

248. அஸர் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்படியொன்றும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அப்படித்தான் நடந்தது! என்று அவர் கூறியதும் மக்களை நோக்கி துல்யதைன் கூறுவத உண்மையா? எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் எனக் கூறியதும், தொழுகையின் மற்ற ரக்அத்துக்களை பூர்த்தி செய்தார்கள். பின்பு இருப்பில் இருந்தவாறே ஸலாம் கொடுத்தப் பின்பு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ. فَقَامَ ذُو الْيَدَيْنِ فَقَالَ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ»، فَقَالَ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ التَّسْلِيمِ، وَهُوَ جَالِسٌ


muwatta-malik-247

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 55

மறந்தவராக இரண்டாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்தவர் செய்ய வேண்டியவை

247. நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் (தொழுகையை) முடித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என (நீண்ட கைகள் உடைய) துல்யதைன் என்ற நபித்தோழர் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மையா? என்று நபி(ஸல்) அவர்ள் கேட்டதும் நபித்தோழர்கள், ‘ஆம்’ என்றனர். பின்பு நபி(ஸல்) எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்துக்களையும் தொழ வைத்தார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறி எப்போதும் செய்யும் ஸஜ்தா போலவோ அல்லது நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தி விட்டு, தக்பீர் கூறி, எப்போதும் செய்யும் ஸஜ்தா போன்றோ அல்லது அதைவிட அதிக நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ»؟ فَقَالَ النَّاسُ: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ


muwatta-malik-245

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 54

இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துதல்?

245. இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்தவோ, தாழ்த்தவோ செய்பவனின் முன் நெற்றி முடியோ ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது என்று அபூஹுரைரா(ரலி) (கூறியதாக மலீஹ்) கூறுகின்றார்கள்.


«الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الْإِمَامِ، فَإِنَّمَا نَاصِيَتُهُ بِيَدِ شَيْطَانٍ»


muwatta-malik-244

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

244. ஒருவர் தொழுகையில் இமாம் ஒரு ரக்அத்தை முடித்த நிலையில் சேர்கிறார். சேர்ந்தவருக்கு ஒற்றையாக ரக்அத் இருக்கும் நிலையில், இமாமின் இரண்டாவது, நான்காவது ரக்அத்தின் இருப்பில் தஷஹ்ஹுது ஓதலாமா? என்று இப்னு ஷிஹாப் அவர்களிடமும், நாபிஉ அவர்களிடமும் கேட்டேன். அவரும் அவருடன் தஷஹ்ஹுத் ஓத வேண்டும் என்ற இருவரும் கூறினார்கள் என்று கூறி விட்டு, இதுவே நம்மிடம் உள்ள சட்டமாகும் என்று மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، وَنَافِعًا مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ رَجُلٍ دَخَلَ مَعَ الْإِمَامِ فِي الصَّلَاةِ، وَقَدْ سَبَقَهُ الْإِمَامُ بِرَكْعَةٍ، أَيَتَشَهَّدُ مَعَهُ فِي الرَّكْعَتَيْنِ وَالْأَرْبَعِ، وَإِنْ كَانَ ذَلِكَ لَهُ وِتْرًا فَقَالَا «لِيَتَشَهَّدْ مَعَهُ» قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا»


muwatta-malik-243

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

243. ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது ஓதினால் அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹ், அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவார்களாம். இப்னு முஹம்மது கூறுகின்றார்கள்.


أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ تَقُولُ إِذَا تَشَهَّدَتْ: «التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ، الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ»


muwatta-malik-242

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

242. ஆயிஷா(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுத் ஓதினால், “அத்தஹிய்யாத்து தய்யிபாத்துஸ் ஸலவாத்துஸ் ஸாகியாத்து லில்லாஹி, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷாரிகலஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ்ஸாலிஹீன், அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள்.


أَنَّهَا كَانَتْ تَقُولُ، إِذَا تَشَهَّدَتِ: «التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ، الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ»


muwatta-malik-241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

241. “பிஸ்மில்லாஹ், அத்தஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலன் னபிய்யி வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது கூறுவார்கள். இதை இரண்டாவது ரக்அத்தில் கூறுவார்கள். பின்பு தஷஹ்ஹுதுக்குப் பின் தனக்குத் தோன்றியதை எல்லாம் துஆச் செய்வார்கள்.

தன் தொழுகையில் கடைசியாக அமர்ந்தால் இவ்வாறே தஷஹ்ஹுதை ஓதுவார்கள் – என்றாலும் தஷஹ்ஹுதை முற்படுத்துவார்கள். பின்பு தனக்குத் தோன்றியதை துஆச் செய்வார்கள். தஷஹ்ஹுத் ஓதுவதை முடித்து, ஸலாம் கூறிட விரும்பினால், “அஸ்ஸலாமு அலன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ் ஸாலிஹீன்” என்று கூறி விட்டு, தன் வலது புறத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள். பின்பு இமாமுக்கு பதில் கூறுவார்கள். அவர்களுக்கு இடது புறத்திலுள்ள யாராவது ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினால் அவருக்குப்பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَتَشَهَّدُ فَيَقُولُ: ” بِسْمِ اللَّهِ، التَّحِيَّاتُ لِلَّهِ، الصَّلَوَاتُ لِلَّهِ، الزَّاكِيَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، شَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَقُولُ هَذَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ. وَيَدْعُو، إِذَا قَضَى تَشَهُّدَهُ، بِمَا بَدَا لَهُ. فَإِذَا جَلَسَ فِي آخِرِ صَلَاتِهِ، تَشَهَّدَ كَذَلِكَ أَيْضًا، إِلَّا أَنَّهُ يُقَدِّمُ التَّشَهُّدَ، ثُمَّ يَدْعُو بِمَا بَدَا لَهُ. فَإِذَا قَضَى تَشَهُّدَهُ، وَأَرَادَ أَنْ يُسَلِّمَ، قَالَ: السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ ” عَنْ يَمِينِهِ، ثُمَّ يَرُدُّ عَلَى الْإِمَامِ. فَإِنْ سَلَّمَ عَلَيْهِ أَحَدٌ عَنْ يَسَارِهِ، رَدَّ عَلَيْهِ


muwatta-malik-240

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

240. அத்தியஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி அத்தய்யிபாத்து ஸலாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில் லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று தஷஹ்ஹுது இருப்பில் கூறுங்கள் என மின்பாரில் இருந்து கொண்டு உமர்(ரலி) அவர்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல்காரி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يُعَلِّمُ النَّاسَ التَّشَهُّدَ، يَقُولُ: قُولُوا: «التَّحِيَّاتُ لِلَّهِ، الزَّاكِيَاتُ لِلَّهِ، الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»


muwatta-malik-239

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

239. காஸிம் பின் இப்னு முஹம்மது அவர்கள் மக்களுக்கு தொழுகையின் தஷஹ்ஹுது இருப்பின் முறையை (செய்து) காட்டினார்கள். (அது சமயம்) தன் பின் பாகத்தின் இடது பகுதியை தரையில்படுமாறு அமர்ந்தார்கள். தன் பாதம் மீது அமரவில்லை. பின்பு, தன்தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) செய்தார்கள் என அவர்களின் மகன் உபைதுல்லாஹ் என்னிடம் கூறினார்கள் என்று கூறினார்கள். இதை யஹ்யா இப்னு ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ «أَرَاهُمُ الْجُلُوسَ فِي التَّشَهُّدِ، فَنَصَبَ رِجْلَهُ الْيُمْنَى، وَثَنَى رِجْلَهُ الْيُسْرَى، وَجَلَسَ عَلَى وَرِكِهِ الْأَيْسَرِ، وَلَمْ يَجْلِسْ عَلَى قَدَمِهِ». ثُمَّ قَالَ: أَرَانِي هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَدَّثَنِي أَنَّ أَبَاهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ


Next Page » « Previous Page