பாடம்:
(தொழுகையின் ஆரம்பத்தில்) காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல்.
879. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி, தம் கைகளை தம் காதுகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பிறகு, அல்குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதி முடித்ததும், “ஆமீன்” என்று தம் சத்தத்தை உயர்த்திச் சொன்னார்கள்.
صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا فَرَغَ مِنْهَا قَالَ: «آمِينَ» يَرْفَعُ بِهَا صَوْتَهُ
சமீப விமர்சனங்கள்