Category: நஸாயி

Nasaayi-3710

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3710. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்.

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعُمْرَى جَائِزَةٌ لِمَنْ أُعْمِرَهَا، وَالرُّقْبَى جَائِزَةٌ لِمَنْ أُرْقِبَهَا، وَالْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Nasaayi-3713

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3713. உம்ரா, ருக்பா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


«لَا تَصْلُحُ الْعُمْرَى وَلَا الرُّقْبَى، فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ، فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ»

أَرْسَلَهُ حَنْظَلَةُ


Nasaayi-3712

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3712. ருக்பா, உம்ரா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


«لَا تَحِلُّ الرُّقْبَى وَلَا الْعُمْرَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ، وَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ لَهُ»


Nasaayi-3709

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பொருட்களை ஆயுட்கால அன்பளிப்பு செய்யாதீர்கள். அப்படி அன்பளிப்பு செய்தாலும் அந்தப்பொருள் அன்பளிப்பு செய்யப்பட்டவருக்கே உரியதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


«لَا تُرْقِبُوا أَمْوَالَكُمْ، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِمَنْ أُرْقِبَهُ»


Nasaayi-3708

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3708. ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

 


«لَا رُقْبَى، فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»


Nasaayi-3697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3697. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Nasaayi-3696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Nasaayi-3695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3695. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»

قَالَ الْأَوْزَاعِيُّ: سَمِعْتُهُ يُحَدِّثُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، بِهَذَا الْحَدِيثِ


Nasaayi-3694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3694. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ بِالصَّدَقَةِ ثُمَّ يَرْجِعُ فِيهَا، كَمَثَلِ الْكَلْبِ قَاءَ ثُمَّ عَادَ فِي قَيْئِهِ فَأَكَلَهُ»


Nasaayi-3693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வந்துள்ள மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள்.

3693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ فَيَأْكُلُهُ»


Next Page » « Previous Page