ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி
1597. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் எந்த அளவுக்கு அறிவை அடைந்தால், அவர் ஓர் (ஃபகீஃ) மார்க்க அறிஞராக கருதப்படுவார்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் மார்க்க விஷயங்கள் தொடர்பான நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவரை ஓர் மார்க்க அறிஞராக அல்லாஹ் எழுப்புவான். மேலும், மறுமை நாளில் நான் அவருக்கு பரிந்துரையாளனாகவும், சாட்சியாகவும் இருப்பேன்.
سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا حَدُّ الْعِلْمِ إِذَا بلغهُ الرَّجُلُ كَانَ فَقِيهًا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا مِنْ أَمْرِ دِينِهَ بَعَثَهُ اللهُ فَقِيهًا، وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا
சமீப விமர்சனங்கள்