Category: திர்மிதீ

Tirmidhi-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெருந்தொடக்கினால் குளிப்பது (கட்டாயம்) என்பது குறித்து வந்துள்ளவை.

103. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையான) குளிப்பை நிறைவேற்றினார்கள். அப்போது இடது கையால் பாத்திரத்தை வலது கையின் மீது சாய்த்து, தமது இரு உள்ளங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது கையை பாத்திரத்தினுள் நுழைத்து, தமது மர்ம உறுப்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு தமது கையால் சுவரையோ அல்லது தரையையோ தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தையும், இரு முழங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது தலையின் மீது மும்முறை தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தமது உடலின் மற்ற பாகங்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சற்றே விலகிச் சென்று தமது கால்களைக் கழுவினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன், ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி), அபூஸயீத் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


«وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَاغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَأَفَاضَ عَلَى فَرْجِهِ، ثُمَّ دَلَكَ بِيَدِهِ الحَائِطَ، أَوِ الأَرْضَ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ»


Tirmidhi-102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

102. அபூஉபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! அது நபிவழி” என்று பதிலளித்தார்கள். மேலும் நான் தலைப்பாகை மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிக்குத் தண்ணீர் படச் செய்” என்று பதிலளித்தார்கள்.


سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «السُّنَّةُ يَا ابْنَ أَخِي»، وَسَأَلْتُهُ عَنِ المَسْحِ عَلَى العِمَامَةِ؟ فَقَالَ: «أَمِسَّ الشَّعَرَ المَاءَ»


Tirmidhi-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

101. பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலைப்பாகை மீதும் (மஸ்ஹு) ஈரக் கையால் தடவினார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَى الخُفَّيْنِ وَالخِمَارِ»


Tirmidhi-3579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3579. அல்லாஹ் தன் அடியாருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதி நேரமாகும். எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களில் நீயும் ஒருவனாக இருக்க முடிந்தால், அவ்வாறு இருப்பாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)


«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»


Tirmidhi-1751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உருவப்படம் வரைவோர் குறித்து வந்துள்ளவை.

1751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது.

தாம் கேட்பதை மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஜுஹைஃபா (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«مَنْ صَوَّرَ صُورَةً عَذَّبَهُ اللَّهُ حَتَّى يَنْفُخَ فِيهَا – يَعْنِي الرُّوحَ – وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا، وَمَنْ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ»


Tirmidhi-3085

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3085.


«لَمْ تَحِلَّ الغَنَائِمُ لِأَحَدِ سُودِ الرُّءُوسِ مِنْ قَبْلِكُمْ، كَانَتْ تَنْزِلُ نَارٌ مِنَ السَّمَاءِ فَتَأْكُلُهَا»

قَالَ سُلَيْمَانُ الأَعْمَشُ: ” فَمَنْ يَقُولُ هَذَا إِلَّا أَبُو هُرَيْرَةَ، الآنَ،

فَلَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ وَقَعُوا فِي الغَنَائِمِ قَبْلَ أَنْ تَحِلَّ لَهُمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {لَوْلَا كِتَابٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ} [الأنفال: 68] “


Tirmidhi-3377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இதற்கு முன்னுள்ள பாடத் தலைப்புடன் தொடர்புடைய செய்திகள்.

3377. “உங்களுடைய செயல்களில் மிகச் சிறந்ததும், உங்களுடைய இறைவனிடத்தில் மிகவும் தூய்மையானதும், உங்களுடைய பதவிகளில் மிகவும் உயர்ந்ததும், தங்கத்தையும் வெள்ளியையும் செலவு செய்வதை விட உங்களுக்கு மேலானதும், உங்களுடைய எதிரிகளை நீங்கள் சந்தித்து நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும், அவர்கள் உங்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும் விட உங்களுக்குச் சிறந்த நற்செயல் எதுவென்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ஆம் (அறிவியுங்கள்)” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,”அது உயர்ந்தோனான அல்லாஹ்வை (திக்ர் செய்து) நினைவு கூர்வது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பிக்க வைப்பதில், (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட மேலான வேறு எந்த செயலும் இல்லை.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இச்செய்தியை அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலரும் இதே அறிவிப்பாளர் தொடரில் (முத்தஸிலாக) அறிவித்துள்ளனர். வேறு சிலர் (ஸியாத் பின் அபூஸியாத் —> அபுத்தர்தா-ரலி என்ற

«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ»؟ قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللَّهِ تَعَالَى»

قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ»


Tirmidhi-3429

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)

என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)


” مَنْ قَالَ فِي السُّوقِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَبَنَى لَهُ بَيْتًا فِي الجَنَّةِ “.


Tirmidhi-3428

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கடைத்தெருவுக்குள் நுழையும்போது சொல்ல வேண்டியவை.

3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)

என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக பத்து லட்சம் (சொர்க்கத்தின்) படித்தரங்களை உயர்த்துகிறான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவரும் இதை ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.


” مَنْ دَخَلَ السُّوقَ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ “


Tirmidhi-3001

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3001.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
அல் குர்ஆன் (3 : 110)

நபி (ஸல்) அவர்கள் (மொத்த சமுதாயத்தில் இறுதியாக) நீங்கள் எழுபதாவது சமுதாயமாக இருக்கின்றீர்கள். அந்த எழுபதில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.


فِي قَوْلِهِ تَعَالَى: {كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ} [آل عمران: 110] قَالَ: «أَنْتُمْ تُتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ»


Next Page » « Previous Page