Category: திர்மிதீ

Tirmidhi-3677

ஹதீஸின் தரம்: குர்ஆனுக்கு முரணான பலவீனமான செய்தி

3677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மாட்டின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, மாடு திடீரென, “நான் இதற்காகப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் விவசாயத்திற்காகப் படைக்கப்பட்டேன்” என்று பேசியது.

மேலும், “நானும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

அந்தநேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை. (அவர்கள் நம்புவார்கள் என்பதாலே நபி (ஸல்) அவர்கள் அப்படி கூறினார்கள்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ بَقَرَةً، إِذْ قَالَتْ: لَمْ أُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ»
قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகைக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு.

லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் சாய்ந்ததும், அதன் கடைசி நேரம் அஸர் தொழுகையின் நேரம் நுழைந்ததும் ஆகும்.

அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் நேரம் நுழைந்ததும், அதன் கடைசி நேரம் சூரியன் மஞ்சள் நிறமாக மாறியதும் ஆகும்.

மக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறைந்ததும், அதன் கடைசி நேரம் அடிவானம் மறையும் வரை ஆகும்.

இஷா தொழுகையின் ஆரம்ப நேரம் அடிவானம் மறைந்ததும், அதன் கடைசி நேரம் இரவு பாதி ஆகும் வரை ஆகும்.

ஃபஜ்ர் தொழுகையின் ஆரம்ப நேரம் ஃபஜ்ர் (அதிகாலை) உதயமானதும், அதன் கடைசி நேரம் சூரியன் உதயமாகும் வரை ஆகும்.”

நான் முஹம்மது (ரஹ்) அவர்களைக் கேட்டேன்: “முஜாஹித் (ரஹ்) அவர்கள் வாயிலாக அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் தொழுகை நேரங்கள் தொடர்பான ஹதீஸ், முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்கள் வாயிலாக அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை விட சரியானது. முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் ஒரு தவறு உள்ளது, அதில் முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்களே தவறு செய்துள்ளார்.”

ஹன்னாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு அபூ

«إِنَّ لِلصَّلَاةِ أَوَّلًا وَآخِرًا، وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلَاةِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَآخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ العَصْرِ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلَاةِ العَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ المَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الأُفُقُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ العِشَاءِ الآخِرَةِ حِينَ يَغِيبُ الأُفُقُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الفَجْرِ حِينَ يَطْلُعُ الفَجْرُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ»


Tirmidhi-152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

152.


أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؟ فَقَالَ: «أَقِمْ مَعَنَا إِنْ شَاءَ اللَّهُ»، فَأَمَرَ بِلَالًا فَأَقَامَ حِينَ طَلَعَ الفَجْرُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ، فَصَلَّى العَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالمَغْرِبِ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ، ثُمَّ أَمَرَهُ بِالعِشَاءِ فَأَقَامَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ مِنَ الغَدِ فَنَوَّرَ بِالفَجْرِ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ، فَأَبْرَدَ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ، ثُمَّ أَمَرَهُ بِالعَصْرِ فَأَقَامَ، وَالشَّمْسُ آخِرَ وَقْتِهَا فَوْقَ مَا كَانَتْ، ثُمَّ أَمَرَهُ فَأَخَّرَ المَغْرِبَ إِلَى قُبَيْلِ أَنْ يَغِيبَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ بِالعِشَاءِ فَأَقَامَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؟»، فَقَالَ الرَّجُلُ: أَنَا، فَقَالَ: «مَوَاقِيتُ الصَّلَاةِ كَمَا بَيْنَ هَذَيْنِ»، «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»
وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ أَيْضًا


Tirmidhi-812

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தியை இந்த வகை அறிவிப்பாளர் தொடரிலேயே நாம் அறிகின்றோம்.

இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. (காரணம்) இதில் இடம்பெறும் ஹிலால் பின் அப்துல்லாஹ் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ البَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


Tirmidhi-2812

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2812.

அபூ ரிம்ஸா (ரலி) கூறுகிறார்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்.”

இந்த ஹதீஸ் நல்ல (ஹசன்) மற்றும் விசித்திரமான (கரீப்) ஹதீஸ். உபைதுல்லாஹ் பின் இயாத் அவர்களின் அறிவிப்பைத் தவிர வேறு எதிலும் இதை நாம் அறியவில்லை. அபூ ரிம்ஸா அல்-தைமியின் பெயர் ஹபீப் பின் ஹய்யான் என்றும், ரிஃபாஆ பின் யத்ரிபி என்றும் கூறப்படுகிறது.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ»


Tirmidhi-3969

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3969.


«مَا مِنْ عَبْدٍ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ إِبِطُهُ يَسْأَلُ اللَّهَ مَسْأَلَةً، إِلَّا آتَاهَا إِيَّاهُ مَا لَمْ يَعْجَلْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ عَجَلَتُهُ؟ قَالَ: ” يَقُولُ: قَدْ سَأَلْتُ وَسَأَلْتُ وَلَمْ أُعْطَ شَيْئًا ”
وَرَوَى هَذَا الحَدِيثَ الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي»


Tirmidhi-2470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

2470. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம். (பிறகு அதில் அதிகமானதை பிறருக்கு வழங்கிவிட்டோம்.) நபி (ஸல்) அவர்கள், “அதில் மீதம் எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டார்கள். நான் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சிதான் மீதம் உள்ளது என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆட்டின் தொடைப் பகுதியைத் தவிர பிறருக்கு தர்மமாக வழங்கியது தான் நமக்கு மீதமாக எஞ்சியுள்ளது” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது சரியான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அபூமைஸரா என்பவர் அபூமைஸரா அல்ஹம்தானீ என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் அம்ர் பின் ஷுரஹ்பீல் என்பதாகும்.


أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ مِنْهَا»؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا قَالَ: «بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»


Tirmidhi-2944

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2944.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “ஜிப்ரீலே! நான் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்திடம் அனுப்பப்பட்டுள்ளேன். அவர்களில் வயதான பெண், பெரிய வயதுடைய ஆண், சிறுவன், சிறுமி மற்றும் எந்த புத்தகத்தையும் படித்தறியாத மனிதரும் உள்ளனர்” என்று கூறினார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “முஹம்மதே! நிச்சயமாக குர்ஆன் ஏழு எழுத்துகளில் அருளப்பட்டது” என்று கூறினார்கள்.

இந்த விஷயத்தில் உமர் (ரலி), ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி), உம்மு ஐயூப் (ரலி) – அவர்கள் அபூ ஐயூபின் மனைவி -, சமுரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஜுஹைம் பின் அல்-ஹாரித் பின் அஸ்-ஸம்மா (ரலி), அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி) மற்றும் அபூ பக்ரா (ரலி) ஆகியோரிடமிருந்தும் செய்திகள் வந்துள்ளன. இது ஒரு நல்ல, சரியான ஹதீஸ். இது உபை பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ، فَقَالَ: ” يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ: مِنْهُمُ العَجُوزُ، وَالشَّيْخُ الكَبِيرُ، وَالغُلَامُ، وَالجَارِيَةُ، وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ “، قَالَ: يَا مُحَمَّدُ إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ


Tirmidhi-3142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3142.


يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ ثَلَاثَةَ أَصْنَافٍ: صِنْفًا مُشَاةً، وَصِنْفًا رُكْبَانًا، وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ “، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ؟ قَالَ: «إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ، أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ»


Tirmidhi-2192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.

2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Next Page » « Previous Page