Category: திர்மிதீ

Tirmidhi-956

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினார்களோ அதற்காக தான் நானும் தல்பியா கூறினேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்தால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.


أَنَّ عَلِيًّا، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ ‏”‏ بِمَ أَهْلَلْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ ‏”‏ لَوْلاَ أَنَّ مَعِي هَدْيًا لأَحْلَلْتُ ‏”‏


Tirmidhi-957

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஜ்ஜுல் அக்பர் நாள் குறித்து கேள்வி கேட்டேன், அது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளாகும் என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.


قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ ‏ “‏ يَوْمُ النَّحْرِ‏” ‏


Tirmidhi-958

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜுல் அக்பர் நாள் என்பது ‘யவ்முன் நஹ்ருடைய’ (துல்ஹஜ் பத்தாம்) நாளாகும்.


قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ


Tirmidhi-962

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ நிலையில் இருந்த போது நறுமணம் கலக்காத ஆலிவ் எண்ணையை (தமது தலையில்) தேய்ப்பார்கள்.


أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ


Tirmidhi-473

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(ளுஹா எனும்) முற்பகல்நேரத் தொழுகை குறித்து வந்துள்ளவை.

473. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ளுஹாத் தொழுகையை 12 ரக்அத்களாக  தொழுதால், அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் தங்கத்தாலான மாளிகையை கட்டுகிறான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹானீ (ரலி), அபூஹுரைரா (ரலி), நுஐம் பின் ஹம்மார் (ரலி), அபூதர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்துஸ் ஸுலமீ (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி), அபூஸயீத் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அனஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ் “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.


«مَنْ صَلَّى الضُّحَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ قَصْرًا مِنْ ذَهَبٍ فِي الجَنَّةِ»


Tirmidhi-249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

249. ஹதீஸ் எண்-248 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


نَحْوَ حَدِيثِ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ


Tirmidhi-248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்த பின்) ஆமீன் கூறுவது பற்றி வந்துள்ளவை.

248. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில்), “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லின்” (எவர் மீது கோபம் கொண்டாயோ அவர்கள் வழியும், வழி தவறியோர் வழியும் அல்ல) என்று ஓதியபோது, “ஆமீன்” என்று தமது குரலால் நீட்டி கூறியதை நான் செவியேற்றேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்கள் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

நபித்தோழர்கள், தாபியீன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்கள், (தொழுகையில்) ஆமீன் கூறும் போது சப்தத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றும், அதை இரகசியமாக கூறக்கூடாது என்றும் கருதுகின்றனர். இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரும் இந்த கருத்தையே கொண்டுள்ளனர்.

ஆனால் ஷுஃபா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, ஸலமா பின் குஹைல் —>  ஹுஜ்ர் (அபுல்அன்பஸ்) —> அல்கமா பின் வாயில் —> அவரது தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,

“நபி (ஸல்) அவர்கள் “கைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லீன்”

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقَالَ: «آمِينَ»، وَمَدَّ بِهَا صَوْتَهُ


Tirmidhi-2167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2167.


إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي – أَوْ قَالَ: أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَلَى ضَلَالَةٍ، وَيَدُ اللَّهِ مَعَ الجَمَاعَةِ، وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ


Tirmidhi-1104

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1104. ஹதீஸ் எண்-1103 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடரில் இது நபியின் சொல்லாக வரவில்லை. இதுதான் மிகச் சரியானதாகும்.

எனவே நபியின் சொல்லாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸ் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெறும் ஹதீஸ் அல்ல. ஏனெனில் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், அப்துல்அஃலா —> ஸயீத் —> கதாதா —> ஜாபிர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நபியின் சொல்லாக வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில், அப்துல்அஃலா அவர்கள் வழியாக நபித்தோழர் (இப்னு அப்பாஸ்-ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகச் சரியானது.

மேலும் கதாதா அவர்களின் மற்ற மாணவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறே ஸயீத் பின் அபூஅரூபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.


நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் மற்றும் பிற அறிஞர்கள் இதன் அடிப்படையிலேயே

نَحْوَهُ


Tirmidhi-1103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சாட்சியின்றி திருமணம் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.

1103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரிகள் தான், சாட்சியின்றி (சான்று இன்றி) தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யூஸுஃப் பின் ஹம்மாத் (ரஹ்) கூறியதாவது:

அப்துல் அஃலா அவர்கள் இந்த ஹதீஸை தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) பாட தலைப்பில், நபியின் சொல்லாக அறிவித்தார். அதே ஹதீஸை தலாக் (விவாகரத்து) பாட தலைப்பில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.


«البَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ»


Next Page » « Previous Page