ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
மக்களிடம் நற்குணத்துடன் பழகுதல் குறித்து வந்துள்ளவை.
1987. “நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையைச் செய்துவிட்டால் அதற்கடுத்து, அதை அழித்துவிடும் நன்மையைச் செய்து விடு. மக்களிடம் நற்குணத்துடன் பழகு” என்று எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மஹ்மூத் பின் ஃகைலான் அவர்களும் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் வழியாக அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக எங்களுக்கு அறிவித்தார்.
மேலும் மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள், இதை வகீஃ அவர்கள் வழியாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் செய்தியாகவும் அறிவித்துவிட்டு அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக வந்திருப்பதே சரியானது என்று கூறினார்.
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»
சமீப விமர்சனங்கள்