Category: திர்மிதீ

Tirmidhi-1076

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆறுதல் கூறுவதின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்றொரு செய்தி.

1076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தையை இழந்து தவிக்கும் தாயாருக்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் (மதிப்புக்குரிய) ஆடை அணிவிக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானதல்ல.


«مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الجَنَّةِ»


Tirmidhi-190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

190.


كَانَ المُسْلِمُونَ حِينَ قَدِمُوا المَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلَوَاتِ وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: اتَّخِذُوا قَرْنًا مِثْلَ قَرْنِ اليَهُودِ، قَالَ: فَقَالَ عُمَرُ: أَوَلَا تَبْعَثُونَ رَجُلًا يُنَادِي بِالصَّلَاةِ؟ قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بِلَالُ قُمْ فَنَادِ بِالصَّلَاةِ»


Tirmidhi-198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

198.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا فِي صَلَاةِ الفَجْرِ»


Tirmidhi-3467

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:)

1 . ஸுப்ஹானல்லாஹில் அழீம். (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)

2 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


«كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».


Tirmidhi-1987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மக்களிடம் நற்குணத்துடன் பழகுதல் குறித்து வந்துள்ளவை.

1987. “நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். தீமையைச் செய்துவிட்டால் அதற்கடுத்து, அதை அழித்துவிடும் நன்மையைச் செய்து விடு. மக்களிடம் நற்குணத்துடன் பழகு” என்று எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மஹ்மூத் பின் ஃகைலான் அவர்களும் இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் வழியாக அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக எங்களுக்கு அறிவித்தார்.

மேலும் மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள், இதை வகீஃ அவர்கள் வழியாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் செய்தியாகவும் அறிவித்துவிட்டு அபூதர் (ரலி) அவர்களின் செய்தியாக வந்திருப்பதே சரியானது என்று கூறினார்.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»


Tirmidhi-2921

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2921. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன்பு முஸப்பிஹாத் எனும் (அத்தியாயங்களான ஸப்பஹ, யுஸப்பிஹு, ஸப்பிஹ் எனத் துவங்கும் 57, 59, 61, 62, 64, 87 ஆகிய ஆறு) அத்தியாயங்களை ஓதுவார்கள். மேலும், இவற்றில் ஒரு வசனம் உள்ளது. அது ஆயிரம் வசனங்களை விடச் சிறந்தது என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ المُسَبِّحَاتِ قَبْلَ أَنْ يَرْقُدَ وَيَقُولُ: «إِنَّ فِيهِنَّ آيَةً خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ»


Tirmidhi-3406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3406.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ المُسَبِّحَاتِ، وَيَقُولُ: «فِيهَا آيَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ آيَةٍ»


Tirmidhi-476

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் (ளுஹா எனும்) முற்பகல் நேரத் தொழுகையின் இரண்டு ரக்அத்களை வழமையாக பேணித் தொழுதால் அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு (அதிகமாக) இருந்தாலும் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரிடமிருந்து வகீஃ பின் ஜர்ராஹ், நள்ர் பின் ஷுமைல் போன்ற சில அறிஞர்களும் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரே (தனித்து) அறிவித்துள்ளார். (மற்ற எவரும் அறிவிக்கவில்லை) என்றே நாம் அறிகிறோம்.


«مَنْ حَافَظَ عَلَى شُفْعَةِ الضُّحَى غُفِرَ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»


Next Page » « Previous Page