Category: திர்மிதீ

Tirmidhi-1104

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1104. ஹதீஸ் எண்-1103 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடரில் இது நபியின் சொல்லாக வரவில்லை. இதுதான் மிகச் சரியானதாகும்.

எனவே நபியின் சொல்லாக வந்துள்ள மேற்கண்ட ஹதீஸ் மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெறும் ஹதீஸ் அல்ல. ஏனெனில் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில், அப்துல்அஃலா —> ஸயீத் —> கதாதா —> ஜாபிர் பின் ஸைத் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நபியின் சொல்லாக வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

இந்தச் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில், அப்துல்அஃலா அவர்கள் வழியாக நபித்தோழர் (இப்னு அப்பாஸ்-ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகச் சரியானது.

மேலும் கதாதா அவர்களின் மற்ற மாணவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறே ஸயீத் பின் அபூஅரூபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.


நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் மற்றும் பிற அறிஞர்கள் இதன் அடிப்படையிலேயே

نَحْوَهُ


Tirmidhi-1103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சாட்சியின்றி திருமணம் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.

1103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரிகள் தான், சாட்சியின்றி (சான்று இன்றி) தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொடுப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யூஸுஃப் பின் ஹம்மாத் (ரஹ்) கூறியதாவது:

அப்துல் அஃலா அவர்கள் இந்த ஹதீஸை தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) பாட தலைப்பில், நபியின் சொல்லாக அறிவித்தார். அதே ஹதீஸை தலாக் (விவாகரத்து) பாட தலைப்பில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.


«البَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ»


Tirmidhi-3000

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3000. அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஉமாமா (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரின் படிகளில் (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) சில தலைகள் நடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “இவை நரகத்தின் நாய்கள். வானத்தின் கீழ் கொல்லப்பட்டவர்களிலேயே இவர்கள்தான் மிகக் கொடியவர்கள். யாரை இந்த காரிஜிய்யாக்கள் கொன்றார்களோ அவர்கள்தான் கொல்லப்பட்டவர்களில் சிறந்தவர்கள்.

பின்னர் அவர்கள், “அன்று சில முகங்கள் வெண்மையாகவும், சில முகங்கள் கருமையாகவும் இருக்கும்” எனும் (அல்குர்ஆன்: 3:106) ஆவது வசனத்தை அதன் இறுதி வரை ஓதினார்கள்.

நான் அபூஉமாமா (ரலி) அவர்களிடம், “இதனை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டீங்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் இதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்று முறை அல்லது நான்கு முறை (ஏழு முறை வரை எண்ணினார்) கேட்டிராவிட்டால், உங்களுக்கு இதை அறிவித்திருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.


رَأَى أَبُو أُمَامَةَ رُءُوسًا مَنْصُوبَةً عَلَى دَرَجِ دِمَشْقَ، فَقَالَ أَبُو أُمَامَةَ: «كِلَابُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ، خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ»، ثُمَّ قَرَأَ: {يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ} [آل عمران: 106] إِلَى آخِرِ الآيَةِ، قُلْتُ لِأَبِي أُمَامَةَ: أَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْ لَمْ أَسْمَعْهُ إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا أَوْ أَرْبَعًا حَتَّى عَدَّ سَبْعًا مَا حَدَّثْتُكُمُوهُ


Tirmidhi-3253

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

அத்தியாயம்: 43

அஸ்ஸுக்ருஃப்.

3253. “ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,

“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்தியை, ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களின் ஹதீஸ் மூலமாக மட்டுமே நாம் அறிகிறோம். ஹஜ்ஜாஜ் அவர்கள் நம்பகமானவர்; அவரின் ஹதீஸ்கள் நடுநிலையானவை.

இதில் இடம்பெறும் அபூ ஃகாலிப் அவர்களின் இயற்பெயர் “ஹஸவ்வர்” என்பதாகும்.


«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الجَدَلَ»، ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الآيَةَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Tirmidhi-2722

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2722.

ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸலாமு அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். மாறாக, ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்று கூறுங்கள்” என்றார்கள்.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ فَقَالَ: ” لَا تَقُلْ: عَلَيْكَ السَّلَامُ، وَلَكِنْ قُلْ: السَّلَامُ عَلَيْكَ


Tirmidhi-3677

ஹதீஸின் தரம்: குர்ஆனுக்கு முரணான பலவீனமான செய்தி

3677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மாட்டின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது, மாடு திடீரென, “நான் இதற்காகப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் விவசாயத்திற்காகப் படைக்கப்பட்டேன்” என்று பேசியது.

மேலும், “நானும், அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

அந்தநேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை. (அவர்கள் நம்புவார்கள் என்பதாலே நபி (ஸல்) அவர்கள் அப்படி கூறினார்கள்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ بَقَرَةً، إِذْ قَالَتْ: لَمْ أُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ»
قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ


Tirmidhi-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகைக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு.

லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் சாய்ந்ததும், அதன் கடைசி நேரம் அஸர் தொழுகையின் நேரம் நுழைந்ததும் ஆகும்.

அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் நேரம் நுழைந்ததும், அதன் கடைசி நேரம் சூரியன் மஞ்சள் நிறமாக மாறியதும் ஆகும்.

மக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறைந்ததும், அதன் கடைசி நேரம் அடிவானம் மறையும் வரை ஆகும்.

இஷா தொழுகையின் ஆரம்ப நேரம் அடிவானம் மறைந்ததும், அதன் கடைசி நேரம் இரவு பாதி ஆகும் வரை ஆகும்.

ஃபஜ்ர் தொழுகையின் ஆரம்ப நேரம் ஃபஜ்ர் (அதிகாலை) உதயமானதும், அதன் கடைசி நேரம் சூரியன் உதயமாகும் வரை ஆகும்.”

நான் முஹம்மது (ரஹ்) அவர்களைக் கேட்டேன்: “முஜாஹித் (ரஹ்) அவர்கள் வாயிலாக அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் தொழுகை நேரங்கள் தொடர்பான ஹதீஸ், முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்கள் வாயிலாக அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை விட சரியானது. முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் ஒரு தவறு உள்ளது, அதில் முஹம்மது பின் ஃபுதைல் (ரஹ்) அவர்களே தவறு செய்துள்ளார்.”

ஹன்னாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு அபூ

«إِنَّ لِلصَّلَاةِ أَوَّلًا وَآخِرًا، وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلَاةِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَآخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ العَصْرِ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلَاةِ العَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ المَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الأُفُقُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ العِشَاءِ الآخِرَةِ حِينَ يَغِيبُ الأُفُقُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الفَجْرِ حِينَ يَطْلُعُ الفَجْرُ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ»


Tirmidhi-152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

152.


أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؟ فَقَالَ: «أَقِمْ مَعَنَا إِنْ شَاءَ اللَّهُ»، فَأَمَرَ بِلَالًا فَأَقَامَ حِينَ طَلَعَ الفَجْرُ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ، فَصَلَّى العَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ، ثُمَّ أَمَرَهُ بِالمَغْرِبِ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ، ثُمَّ أَمَرَهُ بِالعِشَاءِ فَأَقَامَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ مِنَ الغَدِ فَنَوَّرَ بِالفَجْرِ، ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ، فَأَبْرَدَ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ، ثُمَّ أَمَرَهُ بِالعَصْرِ فَأَقَامَ، وَالشَّمْسُ آخِرَ وَقْتِهَا فَوْقَ مَا كَانَتْ، ثُمَّ أَمَرَهُ فَأَخَّرَ المَغْرِبَ إِلَى قُبَيْلِ أَنْ يَغِيبَ الشَّفَقُ، ثُمَّ أَمَرَهُ بِالعِشَاءِ فَأَقَامَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؟»، فَقَالَ الرَّجُلُ: أَنَا، فَقَالَ: «مَوَاقِيتُ الصَّلَاةِ كَمَا بَيْنَ هَذَيْنِ»، «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»
وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ أَيْضًا


Tirmidhi-812

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஹஜ் கடமையானப் பின்பும் அதை விடுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தியை இந்த வகை அறிவிப்பாளர் தொடரிலேயே நாம் அறிகின்றோம்.

இதன் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது. (காரணம்) இதில் இடம்பெறும் ஹிலால் பின் அப்துல்லாஹ் என்பவர் அறியப்படாதவர் ஆவார். ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் அல்அஃவர் என்பவர் (ஹதீஸ்கலை அறிஞர்களால்) பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللَّهِ وَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ البَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


Tirmidhi-2812

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2812.

அபூ ரிம்ஸா (ரலி) கூறுகிறார்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்ததை நான் பார்த்தேன்.”

இந்த ஹதீஸ் நல்ல (ஹசன்) மற்றும் விசித்திரமான (கரீப்) ஹதீஸ். உபைதுல்லாஹ் பின் இயாத் அவர்களின் அறிவிப்பைத் தவிர வேறு எதிலும் இதை நாம் அறியவில்லை. அபூ ரிம்ஸா அல்-தைமியின் பெயர் ஹபீப் பின் ஹய்யான் என்றும், ரிஃபாஆ பின் யத்ரிபி என்றும் கூறப்படுகிறது.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ»


Next Page » « Previous Page