1972. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியான் பொய் பேசும்போது அதனுடைய துர்வாடையால் வானவர், ஒரு மைல் தூரம் அவனை விட்டும் தூரமாகிவிடுகிறார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும்) யஹ்யா பின் மூஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவரிடம், “இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாக அப்துல்அஸீஸ் பின் அபூரவ்வாத் அவர்கள் இந்த செய்தியை உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹீம் என்பவர் “ஆம்” என்று கூறினார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.
மேலும், இந்தச் செய்தியை அப்துர்ரஹீம் பின் ஹாரூன் என்பவர் தனித்து அறிவித்துள்ளார்.
«إِذَا كَذَبَ العَبْدُ تَبَاعَدَ عَنْهُ المَلَكُ مِيلًا مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ؟»
قَالَ يَحْيَى: فَأَقَرَّ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ، فَقَالَ: نَعَمْ،
சமீப விமர்சனங்கள்