அம்ர் பின் ஸலமா பின் கரிப் அல்ஹம்தானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டு வாசலில் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் அமர்ந்திருப்போம். அவர்கள் வெளியே வரும்போது, அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பள்ளிவாசலுக்கு நடந்து செல்வோம். அப்போது அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, “அபூஅப்துர்ரஹ்மான் (இப்னு மஸ்ஊத்) வெளியே வந்துவிட்டார்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இன்னும் அவர் வரவில்லை” என்றோம். உடனே அவர்களும் எங்களுடன் அமர்ந்துகொண்டார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) வெளியே வந்ததும், நாங்கள் எல்லோரும் அவர்களிடம் சென்றோம். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள், “அபூஅப்துர் ரஹ்மானே! நான் இப்போது பள்ளிவாசலில் ஒரு விஷயத்தைக் கண்டேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அல்ஹம்துலில்லாஹ், நான் அதை நல்லதாகவே கருதுகிறேன்” என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், “நீங்கள் உயிரோடு இருந்தால், அதைப் பார்ப்பீர்கள். நான் ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்கள் பள்ளிவாசலில் வட்டமாக வட்டமாக அமர்ந்து தொழுகை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் கையில் கூழாங்கற்களை வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு வட்டத்திலும் ஒருவர் இருந்துக் கொண்டு ‘அல்லாஹு அக்பர்’ என்று 100 முறை சொல்லுங்கள் என்று சொல்கிறார். உடனே அவர்கள் 100 முறை “அல்லாஹு அக்பர்” என்று சொல்கிறார்கள். பிறகு ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று 100 முறை சொல்லுங்கள்’ என்று சொல்கிறார். அவர்களும் 100 முறை ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்று சொல்கிறார்கள். பின்னர் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று 100 முறை சொல்லுங்கள்’ என்று கூற, அவர்களும் ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று 100 முறை சொல்கிறார்கள்” என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) “நீங்கள் அவர்களிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஸா (ரலி) அவர்கள், “உங்கள் கருத்தை அல்லது உத்தரவை எதிர்பார்த்து, நான் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அவர்களுடைய பாவங்களை எண்ணிக்கொள்ளச் சொல்லியிருக்கக் கூடாதா? நீங்கள் அவர்களுடைய நன்மைகள் ஒன்றும் வீணாகாது என்று உறுதி அளித்திருக்கலாமே!” என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த வட்டங்களில் ஒன்றிற்குச் சென்று, நின்று கொண்டு “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “அபூஅப்துர்ரஹ்மானே! இந்தக் கூழாங்கற்களால் தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹை எண்ணுகிறோம்” என்று அவர்கள் பதிலளித்தனர்.
இப்னு மஸ்ஊத் (ரலி) (கடிந்துகொண்டு) சொன்னார்கள்:
உங்கள் பாவங்களை எண்ணுங்கள்! (இதை நீங்கள் செய்ததால்) உங்கள் நற்செயல்கள் எதுவும் வீணாகிவிடாது என்று நான் உறுதி அளிக்கிறேன். அட, முஹம்மதின் சமுதாயமே! உங்கள் அழிவு எவ்வளவு விரைவாக வருகிறது! இதோ இந்த, உங்கள் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நிறைய பேர் உயிரோடு இருக்கிறார்கள். இதோ, அவர்களுடைய ஆடைகள் தேய்ந்துபோகவில்லை; பாத்திரங்கள் உடைந்துபோகவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் நிலை என்னவென்றால், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழியைவிட மிக நேரான வழியில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். (இவ்வாறு செய்வதால்) நீங்கள் தவறான வழியின் வாசலைத்தான் திறக்கிறீர்கள்!.
அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக, அபூஅப்துர்ரஹ்மானே! இதன் மூலம் நாங்கள் நன்மையையே நாடுகிறோம்” என்று கூறினார்கள்.
அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், எத்தனையோ பேர் நன்மையை நாடுகிறார்கள். ஆனால் அதை அவர்கள் அடையமாட்டார்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: “சிலர் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது”.
அல்லாஹ்வின் மீதாணையாக, உங்களில் பெரும்பாலோர் அப்படி இருக்கலாம்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினார்கள்.
அம்ர் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்:
(அலீ-ரலி-அவர்களுக்கும், காரிஜிய்யா கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது) நஹ்ரவான் எனும் இடத்தில் காரிஜிய்யா கூட்டத்துடன் சேர்ந்துக் கொண்டு எங்களுக்கு எதிராகப் போரிட்டவர்களில் பெரும்பாலோர் இந்த வட்டங்களில் இருந்தவர்கள் என்பதை நாங்கள் கண்டோம்.
(ஸுனன் தாரிமீ: 210)أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَنبَأَنَا عَمْرُو بْنُ يَحْيَى، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ، عَنْ أَبِيهِ قَالَ:
كُنَّا نَجْلِسُ عَلَى بَابِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَبْلَ صَلَاةِ الْغَدَاةِ، فَإِذَا خَرَجَ، مَشَيْنَا مَعَهُ إِلَى الْمَسْجِدِ، فَجَاءَنَا أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: أَخَرَجَ إِلَيْكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ قُلْنَا: لَا، بَعْدُ. فَجَلَسَ مَعَنَا حَتَّى خَرَجَ، فَلَمَّا خَرَجَ، قُمْنَا إِلَيْهِ جَمِيعًا، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنِّي رَأَيْتُ فِي الْمَسْجِدِ آنِفًا أَمْرًا أَنْكَرْتُهُ وَلَمْ أَرَ – وَالْحَمْدُ لِلَّهِ – إِلَّا خَيْرًا. قَالَ: فَمَا هُوَ؟ فَقَالَ: إِنْ عِشْتَ فَسَتَرَاهُ. قَالَ: رَأَيْتُ فِي الْمَسْجِدِ قَوْمًا حِلَقًا جُلُوسًا يَنْتَظِرُونَ الصَّلَاةَ فِي كُلِّ حَلْقَةٍ رَجُلٌ، وَفِي أَيْدِيهِمْ حصًا، فَيَقُولُ: كَبِّرُوا مِائَةً، فَيُكَبِّرُونَ مِائَةً، فَيَقُولُ: هَلِّلُوا مِائَةً، فَيُهَلِّلُونَ مِائَةً، وَيَقُولُ: سَبِّحُوا مِائَةً، فَيُسَبِّحُونَ مِائَةً، قَالَ: فَمَاذَا قُلْتَ لَهُمْ؟ قَالَ: مَا قُلْتُ لَهُمْ شَيْئًا انْتِظَارَ رَأْيِكَ أَوِ انْتظارَ أَمْرِكَ. قَالَ: «أَفَلَا أَمَرْتَهُمْ أَنْ يَعُدُّوا سَيِّئَاتِهِمْ، وَضَمِنْتَ لَهُمْ أَنْ لَا يَضِيعَ مِنْ حَسَنَاتِهِمْ»، ثُمَّ مَضَى وَمَضَيْنَا مَعَهُ حَتَّى أَتَى حَلْقَةً مِنْ تِلْكَ الْحِلَقِ، فَوَقَفَ عَلَيْهِمْ، فَقَالَ: «مَا هَذَا الَّذِي أَرَاكُمْ تَصْنَعُونَ؟» قَالُوا: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ حصًا نَعُدُّ بِهِ التَّكْبِيرَ وَالتَّهْلِيلَ وَالتَّسْبِيحَ. قَالَ: «فَعُدُّوا سَيِّئَاتِكُمْ، فَأَنَا ضَامِنٌ أَنْ لَا يَضِيعَ مِنْ حَسَنَاتِكُمْ شَيْءٌ وَيْحَكُمْ يَا أُمَّةَ مُحَمَّدٍ، مَا أَسْرَعَ هَلَكَتَكُمْ هَؤُلَاءِ صَحَابَةُ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَافِرُونَ، وَهَذِهِ ثِيَابُهُ لَمْ تَبْلَ، وَآنِيَتُهُ لَمْ تُكْسَرْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّكُمْ لَعَلَى مِلَّةٍ هِيَ أَهْدَى مِنْ مِلَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أوْ مُفْتَتِحُو بَابِ ضَلَالَةٍ». قَالُوا: وَاللَّهِ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، مَا أَرَدْنَا إِلَّا الْخَيْرَ. قَالَ: «وَكَمْ مِنْ مُرِيدٍ لِلْخَيْرِ لَنْ يُصِيبَهُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّ» قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ “، وَايْمُ اللَّهِ مَا أَدْرِي لَعَلَّ أَكْثَرَهُمْ مِنْكُمْ، ثُمَّ تَوَلَّى عَنْهُمْ. فَقَالَ عَمْرُو بْنُ سَلَمَةَ: رَأَيْنَا عَامَّةَ أُولَئِكَ الْحِلَقِ يُطَاعِنُونَا يَوْمَ النَّهْرَوَانِ مَعَ الْخَوَارِجِ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-210.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-206.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். (சுருக்கமான செய்தியை பார்க்க: திர்மிதீ-2188)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தாரிமீ இமாம்
2 . அம்ர் பின் யஹ்யா
3 . யஹ்யா பின் அம்ர் பின் ஸலமா
4 . அம்ர் பின் ஸலமா
5 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
5 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் யஹ்யா —> யஹ்யா பின் அம்ர் பின் ஸலமா —> அம்ர் பின் ஸலமா —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37890, தாரிமீ-210,
மேலும் பார்க்க: புகாரி-3611.
இதனுடன் தொடர்புடைய தஸ்பீஹ் குறித்த செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3554,
இந்த ஹதீதின் அடிக் குறிப்பில் திர்மிதி 2188 வந்துள்ளது. அப்பக்கத்திற்கு சென்றால் Nothing Found என்று வருகின்றதே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிவு செய்யாத செய்திகள் அவ்வாறே காட்டும். இந்தச் செய்தி இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.