உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 3004)ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُمِرَ بِهَذَا الْأَمْرِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3004.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3080.
சிலர் இந்தச் செய்தி நபியின் சொல்லாக வந்திருப்பதே சரி என்றும், வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பதே சரி என்றும் கூறியுள்ளனர். எனவே இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து பிறகு தரம் பதிவிடப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1673 ,
இதன் தரம்
شعيب الأرنؤوط، تخريج صحيح ابن حبان (٣٠٠٤)
அஸ்ஸலாமு அலைக்கும். இதைத் தான் மேலே நான் குறிப்பிட்டுள்ளேன். இதை சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல் என்றும் கூறியுள்ளனர்.