தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-11

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் (தங்களுக்கு முன்னால்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு அதன் வலது பக்கத்தில் இரண்டு கோடுகளையும், இடது பக்கத்தில் இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் தங்களுடைய கையை நடுவில் உள்ள கோட்டின் மீது வைத்து, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)

(இப்னுமாஜா: 11)

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، قَالَ: سَمِعْتُ مُجَالِدًا يَذْكُرُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:

كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَّ خَطًّا، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الْأَوْسَطِ، فَقَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ} [الأنعام: 153]


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-11.
Ibn-Majah-Shamila-11.
Ibn-Majah-Alamiah-11.
Ibn-Majah-JawamiulKalim-11.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்-முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா

2 . அப்துல்லாஹ் பின் ஸயீத்-அல்கின்தீ

3 . ஸுலைமான் பின் ஹய்யான்-அபூகாலித்

4 . முஜாலித் பின் ஸயீத்

5 . ஆமிர் அஷ்ஷஅபீ-ஆமிர் பின் ஷராஹீல்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


 


2 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1865.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.