நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது.
ஆட்டில் பரக்கத் இருக்கிறது.
குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
(இப்னுமாஜா: 2305)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، يَرْفَعُهُ، قَالَ:
«الْإِبِلُ عِزٌّ لِأَهْلِهَا، وَالْغَنَمُ بَرَكَةٌ، وَالْخَيْرُ مَعْقُودٌ فِي نَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2305.
Ibn-Majah-Shamila-2305.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-2298.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நுமைர்
3 . அப்துல்லாஹ் பின் இத்ரீஸ்
4 . ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான்
5 . ஷஅபீ-ஆமிர் பின் ஷராஹீல்
6 . உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
இந்த செய்தியில் வரும் “ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது” என்ற வாசகம் ஷாத் என்ற வகையில் பலவீனமாகும். காரணம் ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இவ்வாறு கூறவில்லை. அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் அவர்கள் மட்டுமே இவ்வாறு அறிவித்துள்ளார். பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி இங்கு பொருந்தாது.
(பார்க்க: الإبل عز لأهلها و الغنم بركة)
- இந்தச் செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
1 . உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் —> ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் —> ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
—> உர்வா பின் அபுல்ஜஃத் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-2305, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-,
- இந்தச் செய்தியின் இரண்டாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-2304.
- இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2852.
சமீப விமர்சனங்கள்