தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-2799

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஆறு பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, சொர்க்கத்தில் அவரின் இருப்பிடத்தைக் காட்டப்படும்.

2 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

3 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.

4 . ஈமான் என்னும் அணிகலன் அவருக்கு அணியப்படும்.

5 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

6 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

(இப்னுமாஜா: 2799)

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يَغْفِرُ لَهُ فِي أَوَّلِ دُفْعَةٍ مِنْ دَمِهِ، وَيُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ، وَيُحَلَّى حُلَّةَ الْإِيمَانِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2789.
Ibn-Majah-Shamila-2799.
Ibn-Majah-Alamiah-2789.
Ibn-Majah-JawamiulKalim-2792.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம்வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானதாகும். பஹீர் பின் ஸஃத் ஷாம்வாசி என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1663 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.