தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-9111

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒரு மனிதர் வந்து அருகில் அமர்ந்தார். அவரிடம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீ எங்கிருந்து வருகிறாய்! என்று கேட்டார்கள். அதற்கவர், “ஸம்ஸம் கிணற்றுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வருகிறேன்” என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிக்க வேண்டிய முறைப்படி குடித்தீரா? என்று கேட்டார். அதற்கவர், குடிக்கவேண்டிய முறை என்றால் அது எவ்வாறு? என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீர், ஸம்ஸம் தண்ணீரை குடிப்பதாக இருந்தால் கஃபா திசையை முன்னோக்க வேண்டும்; பிறகு பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் என்று கூறி, மூன்று முறை மூச்சு விட்டுப் பருக வேண்டும். மேலும் வயிறு நிரம்ப அதிகமாகக் குடிக்க வேண்டும்; பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

ஏனெனில், “நமக்கும், நயவஞ்சகர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அவர்கள், ஸம்ஸம் நீரை வயிறு நிரம்ப குடிக்கமாட்டார்கள். (நாம் வயிறு நிரம்ப குடிப்போம்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று கூறினார்.

(musannaf-abdur-razzaq-9111: 9111)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَلَا أَعْلَمُ الثَّوْرِيَّ إِلَّا قَدْ حَدَّثْنَاهُ عَنْ عُثْمَانَ بْنِ الْأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ:

كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَجَاءَهُ رَجُلٌ، فَجَلَسَ إِلَى جَنْبِهِ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: مِنْ أَيْنَ جِئْتَ؟ قَالَ: شَرِبْتُ مِنْ زَمْزَمَ قَالَ: شَرِبْتَهَا كَمَا يَنْبَغِي؟ قَالَ: وَكَيْفَ يَنْبَغِي يَا ابْنَ عَبَّاسٍ؟ قَالَ: تَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَتُسَمِّي اللَّهَ ثُمَّ تَشْرَبُ، وَتَتَنَفَّسُ ثَلَاثَ مَرَّاتٍ، فَإِذَا فَرَغْتَ حَمِدْتَ اللَّهَ تَعَالَى، وَتَتَضَلَّعُ مِنْهَا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ آيَةَ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُنَافِقِينَ أَنَّهُمْ لَا يَتَضَلَّعُونَ مِنْ زَمْزَمَ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-9111.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-8903.




  • உஸ்மான் பின் அஸ்வத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் மூஸா, மக்கீ பின் இப்ராஹீம், அப்துல்லாஹ் பின் முபாரக் ஆகியோர் உஸ்மான் பின் அஸ்வத் —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். அதிகமான பலமானவர்கள் இவ்வாறு அறிவித்திருப்பதால் இதுவே முன்னுரிமை பெற்ற செய்தியாகும். மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் ஷாத் ஆகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3061 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.