தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-4112

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 4112)

حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ قَالَ: سَمِعْتُ الْقَاسِمَ بْنَ مُخيْمَرَةَ، يَذْكُرُ

أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ يُصَلَّى بِهِمْ فَأَبَى، فَدَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكُلُّكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بيْتِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ الْقَوْمَ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-4112.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-4006.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22520-அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் பலமானவர் தான். என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் ராவீ-13894-அபூஉஸாமா என்ற ஹம்மாத் பின் உஸாமா அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் தமீம் என்ற பலவீனமான அறிவிப்பாளரைத் தான் தவறாக அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் என்ற பலமான அறிவிப்பாளராக குறிப்பிட்டுள்ளார் என அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/527, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/164, ஸுஆலாதுல் ஆஜுரீ-327)…

  • இதற்கு அறிஞர்கள் கூறும் காரணம், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர். பலமானவர். இவர் கூஃபாவிற்கு வந்தபோது மக்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்டனர். ஆனால் அபூஉஸாமா அவர்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்கவில்லை. பிறகு அதே ஷாம் நாட்டைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் தமீம் என்பவர் கூஃபாவிற்கு வந்தார். அவரிடம் அபூஉஸாமா அவர்கள் ஹதீஸைக் கேட்டார். அவரின் பெயர் என்ன என்று அபூஉஸாமா கேட்கும்போது அவர் என் பெயர் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் என்று கூறினார். இதை அபூஉஸாமா அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் என்ற நினைத்துவிட்டார். (அல்ஜர்ஹு வத்தஃதீல்-1/55)
  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் தமீம் பலவீனமானவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/565, தக்ரீபுத் தஹ்தீப்-1/604)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

5 . இந்தக் கருத்தில் ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-411217137 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-360 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.