ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (ஸமுரா-ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கி விட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 33
(முஸ்லிம்: 3722)حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ
انْطَلَقْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي أَبِي، فَسَمِعْتُهُ يَقُولُ: «لَا يَزَالُ هَذَا الدِّينُ عَزِيزًا مَنِيعًا إِلَى اثْنَيْ عَشَرَ خَلِيفَةً»، فَقَالَ كَلِمَةً صَمَّنِيهَا النَّاسُ، فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
Muslim-Tamil-3722.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1821.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3403.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஆமிர் ஷஅபீ—
பார்க்க: …அஹ்மத்-20814, 20926, முஸ்லிம்-3721, 3722,
ஸிமாக்
பார்க்க: முஸ்லிம்-3719, 3720,
அப்துல்மலிக்
பார்க்க: …புகாரி-7222, முஸ்லிம்-3719,
ஹுஸைன்
பார்க்க: …முஸ்லிம்-3718,
…
சமீப விமர்சனங்கள்