ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்ந்த ஆடு ஒன்றைப் பரிசாக அளித்தாள். நபி (ஸல்) அவர்கள் அவளிடம் ஆளனுப்பி, ‘நீ இவ்வாறு செய்ய உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவள், ‘நீங்கள் இறைத்தூதராக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு அதைப் பற்றி அறிவிப்பான் என்றும், நீங்கள் இறைத்தூதர் இல்லையென்றால், மக்களை உங்களை விட்டும் நான் நிம்மதியாக்க விரும்பினேன்’ என்றும் கூறினாள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அந்த விஷத்தின் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம், அவர்கள் இரத்தம் குத்திக்கொள்வார்கள். ஒருமுறை, அவர்கள் பயணத்தில் இருந்தபோது, இஹ்ராம் அணிந்த நிலையில் அந்த விஷத்தின் பாதிப்பை உணர்ந்தார்கள். அப்போதும் அவர்கள் இரத்தம் குத்திக்கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2784)حَدَّثَنَا سُرَيْجٌ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ هِلالٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ:
أَنَّ امْرَأَةً مِنَ الْيَهُودِ أَهْدَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَسْمُومَةً، فَأَرْسَلَ إِلَيْهَا، فَقَالَ: «مَا حَمَلَكِ عَلَى مَا صَنَعْتِ؟» قَالَتْ: أَحْبَبْتُ – أَوْ أرَدْتُ – إِنْ كُنْتَ نَبِيًّا فَإِنَّ اللَّهَ سَيُطْلِعُكَ عَلَيْهِ، وَإِنْ لَمْ تَكُنْ نَبِيًّا أُرِيحُ النَّاسَ مِنْكَ
قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا احْتَجَمَ» ، قَالَ: «فَسَافَرَ مَرَّةً، فَلَمَّا أَحْرَمَ، وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَاحْتَجَمَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2784.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
4 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2784, அல்முஃஜமுல் கபீர்-11503,
மேலும் பார்க்க: புகாரி-3169.
இரத்தம் குத்தி எடுப்பது பற்றி மட்டும் வரும் செய்திகள்
பார்க்க: …
சமீப விமர்சனங்கள்