பாடம்:
தொழுகையைத் துவக்கும் போது ஓதவேண்டிய மற்றொரு துஆ.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள்.
(பொருள்: இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை)
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
(நஸாயி: 899)نَوْعٌ آخَرُ مِنَ الذِّكْرِ بَيْنَ افْتِتَاحِ الصَّلَاةِ وَبَيْنَ الْقِرَاءَةِ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-899.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-889.
ஸலாம் அலைக்கும்.
திர்மிதி 243,அபுதாவூத் 775,776, இப்னுமாஜா 809 ஹதீத்கள் தொழுகை துவக்க துஆ, தக்பீரத்து இஹ்ராமிற்கு , பிறகு உள்ள ஸனாவை விளக்குகின்றன. ஆய்வாளர் பிஜே அவர்களின் ஆய்வின் படி இது ஸஹீஹ்.
வ அலைக்கும் ஸலாம். சுருக்கமாக அபூதாவூத்-775 இன் அடிக்குறிப்பில் கூறியுள்ளோம். பார்க்கவும். இன்ஷா அல்லாஹ் முழு தகவல் பிறகு சேர்ப்போம்.