பாடம்:
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படவில்லை என்பது குறித்து வந்துள்ளவை.
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தற்கொலை செய்துக் கொண்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தவில்லை.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
(தற்கொலை செய்தவருக்கு (ஜனாஸாத்) தொழுகை வைக்கலாமா? என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
சில அறிஞர்கள் கூறுகிறார்கள்: கிப்லாவை நோக்கி தொழுத அனைவருக்காகவும், தற்கொலை செய்தவருக்காகவும் (ஜனாஸாத்) தொழ வேண்டும். இது ஸுஃப்யான் ஸவ்ரீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோரின் கருத்தாகும்.
அஹ்மத் இமாம் கூறுகிறார்: தற்கொலை செய்தவருக்காக இமாம் தொழக்கூடாது. ஆனால் இமாம் அல்லாத மற்ற (பொது) மக்கள் தொழலாம்.
(திர்மிதி: 1068)بَابُ مَا جَاءَ فِيمَنْ قَتَلَ نَفْسَهُ لَمْ يُصَلَّ عَلَيْهِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، وَشَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ،
«أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ» وَاخْتَلَفَ أَهْلُ العِلْمِ فِي هَذَا، فَقَالَ بَعْضُهُمْ: يُصَلَّى عَلَى كُلِّ مَنْ صَلَّى إِلَى القِبْلَةِ، وَعَلَى قَاتِلِ النَّفْسِ، وَهُوَ قَوْلُ الثَّوْرِيِّ، وَإِسْحَاقَ “، وقَالَ أَحْمَدُ: «لَا يُصَلِّي الإِمَامُ عَلَى قَاتِلِ النَّفْسِ، وَيُصَلِّي عَلَيْهِ غَيْرُ الإِمَامِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1068.
Tirmidhi-Alamiah-988.
Tirmidhi-JawamiulKalim-986.
சமீப விமர்சனங்கள்