தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1674

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

வாகனத்தில் தனியாகப் பயணம் செய்யும் ஒரு வாகனப் பயணி ஷைத்தான் ஆவார். இரு வாகனப் பயணிகள் இரு ஷைத்தான்களாவர். மூன்று பயணிகளே பயணிகள் ஆவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு பின் ஷுஐப் (ரலி)

(திர்மதி: 1674)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الرَّاكِبُ شَيْطَانٌ، وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ، وَالثَّلَاثَةُ رَكْبٌ»

حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَاصِمٍ، وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: مُحَمَّدٌ: هُوَ ثِقَةٌ صَدُوقٌ، وَعَاصِمُ بْنُ عُمَرَ العُمَرِيُّ ضَعِيفٌ فِي الحَدِيثِ لَا أَرْوِي عَنْهُ شَيْئًا، وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1595.
Tirmidhi-Shamila-1674.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1595.




இந்த ஹதீஸ் திர்மிதி, அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
, முஸ்னத் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
, ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அஸ்ஸுனனுல் குப்ரா (நஸஈ) , அஸ்ஸுனனுல் குப்ரா (பைஹகி) போன்ற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து நூல்களிலும் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதாலும், இதன் கருத்து ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதாலும் இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் இப்னு ஹர்மலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب (6/ 161)

330 – “م 4 عبد الرحمن” بن حرملة بن عمرو بن سنة1 الأسلمي أبو حرملة روى عن سعيد ابن المسيب وحنظلة بن علي الأسلمي وعمرو بن شعيب وعبد الله بن نيار بن مكرم الأسلمي وثمامة ابن شفى أبي علي الهمداني وثمامة بن وائل أبي ثفال المري وأم حبيبة بنت ذويب المزنية وغيرهم وعنه الثوري والأوزاعي ومالك وسليمان بن بلال وابن أبي الزناد والداروردي وإسماعيل بن جعفر وحاتم بن إسماعيل وبشر أبن المفضل وابن علية والقطان وعلي بن عاصم وجماعة قال يحيى ابن سعيد عنه كنت سيء الحفظ فرخص لي سعيد في الكتابة قال يحيى بن سعيد محمد بن عمر وأحب إلي من بن حرملة وكان ابن حرملة يلقن وقال ابن خلاد الباهلي سألت القطان عنه فضعفه ولم يدفعه وقال إسحاق عن ابن معين صالح وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به قال النسائي ليس به بأس وذكره ابن حبان في الثقات وقال يخطىء وقال ابن سعد توفي سنة خمس وأربعين ومائة قال محمد بن عمرو كان ثقة كثير الحديث روى له مسلم حديثا واحدا متابعة في القنوت قلت وقال الساجي صدوق يهم في الحديث وقال ابن عدي لم أر في حديثه حديثا منكرا ونقل بن خلفون عن ابن نمير أنه وثقه وقال الطحاوي لا يعرف له سماع من أبي علي الهمداني.

  • இவரைப் பற்றி  இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், “இவர் உறுதியானவர் அல்ல” என்றும்,
  • அபூ ஜஅஃபர் மற்றும் யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் ஆகியோர் இவரை ‘பலவீனமானவர்’ என்றும்,
  • அபூ ஹாத்தம் அர்ராஸி அவர்கள், ‘இவர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படத் தக்கவர் அல்ல’ என்றும் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத் தக்கது அல்ல. (தஹ்தீபுத் தஹ்தீப்)

2. தனியாகப் பயணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள்:

…..ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ‘இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?’ என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார்…..

(அல்குர்ஆன் 2:259)

மேலும் பார்க்க: அஹ்மத்-2184 .

3. இருவர் பயணம் செய்வது

உமர் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அப்போது தமக்கு ஏற்பட்ட சூழ்நிலையைக் குறித்து நபிகளாரிடமும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ”எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை” என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் இப்னு  யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ”உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி, “இப்படிச் செய்வது உமக்குப் போதுமே” எனக் கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு  அப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி-338 , முஸ்லிம்-603 .

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-2801 , அஹ்மத்-6748 , 7007 , அபூதாவூத்-2607 , திர்மிதீ-1674 , குப்ரா நஸாயீ-8798 , இப்னு குஸைமா-2570 , ஹாகிம்-2495 , குப்ரா பைஹகீ-10347 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.