தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-677

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஆவியா (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவருடைய முஅத்தின் (பாங்கு சொல்பவர்) பாங்கு கூறினார். பாங்கு சொல்பவர் கூறியவாறே முஆவியா (ரலி) அவர்களும் கூறி வந்தார்கள்.

பாங்கு சொல்பவர் “ஹய்ய அலஸ்ஸலாஹ்” (தொழுகையின்பால் வாருங்கள்) என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியும் இல்லை, எந்த வல்லமையும் இல்லை) என்று குறிப்பிட்டார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்” (வெற்றியின்பால் வாருங்கள்) என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்களும், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகு பாங்கு சொல்பவர் கூறியதை அப்படியே முஆவியா (ரலி) அவர்களும் கூறினார்கள்.

பிறகு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்வதை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

(நஸாயி: 677)

الْقَوْلُ إِذا قَالَ الْمُؤَذِّنُ: حَيَّ عَلَى الصَّلَاةِ , حَيَّ عَلَى الْفَلَاحِ

أَخْبَرَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِقْسَمِيُّ قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى، أَنَّ عِيسَى بْنَ عُمَرَ أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ قَالَ:

إِنِّي عِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ، فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ الْمُؤَذِّنُ حَتَّى إِذَا قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». فَلَمَّا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ، ثُمَّ قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِثْلَ ذَلِكَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-677.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அஹ்மத்-16828.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.