பாடம்:
இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வது வெறுப்புக்குரிய செயல்.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீயே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதையே உமக்கும் விரும்புகின்றேன். எனக்கு எதை நான் வெறுக்கின்றேனோ அதையே உமக்கும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் (கால்களை நட்டி வைத்து, பிட்டத்தை தரையில் வைத்து) குத்துக்காலிட்டு அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அலீ (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸ் அல்அஃவர் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் அறிகிறோம்.
இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பலவீனமானவர் என அறிஞர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பெரும்பாலான அறிஞர்கள் இந்தச் செய்தியின் அடிப்படையில் (குந்தியமர்ந்து-குத்துக்காலிட்டு) தொழுவதை வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனக் கருதுகின்றனர்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
(திர்மிதி: 282)بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الإِقْعَاءِ بَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ:
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ، أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي، لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ»،
«هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ، إِلَّا مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ، عَنِ الحَارِثِ، عَنْ عَلِيٍّ» وَقَدْ ضَعَّفَ بَعْضُ أَهْلِ العِلْمِ الحَارِثَ الأَعْوَرَ ” وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: يَكْرَهُونَ الإِقْعَاءَ ” وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-282.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
…
அரபு மொழியில் ‘இக்ஆ’ (إقعاء) என்று அழைக்கப்படும் அமர்வு முறை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் அதன் சட்டங்களைப் பற்றிய விளக்கம்:
1. முதல் வகை: தடுக்கப்பட்டது.
ஒருவர் தனது இரு பிட்டங்களையும் தரையில் வைத்து, இரண்டு கால்களையும் (கெண்டைக்கால் பகுதியை) செங்குத்தாக நட்டு வைத்து, கைகளை தரையில் ஊன்றி அமர்வதாகும். (முஸ்லிம்-857)
உவமை: இது நாய் அமர்வதைப் போன்ற அமைப்பாகும்.
மொழி அறிஞர்கள்: அபூஉபைதா, அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம் மற்றும் பல மொழி வல்லுநர்கள் இதையே ‘இக்ஆ’ என்று விளக்குகிறார்கள்.
சட்டம்: நபிமொழிகளில் தடுக்கப்பட்ட ‘மக்ரூஹ்’ (வெறுக்கத்தக்க) முறை இதுவாகும்.
2. இரண்டாம் வகை: அனுமதிக்கப்பட்டது.
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமரும்போது, தனது இரு பிட்டங்களையும் இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து அமர்வதாகும். அதாவது, பாதங்களை நட்டு வைத்து அதன் மேல் அமருதல்.
ஆதாரம்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது உங்கள் நபியின் வழிமுறையாகும்” என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அறிஞர்களின் கருத்து: இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ‘அல்-புவைதி’ மற்றும் ‘அல்-இம்லா’ ஆகிய நூல்களில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் இவ்வாறு அமர்வது ‘முஸ்தஹப்’ (விரும்பத்தக்கது) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆய்வாளர்கள்: இமாம் பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
காழி இயாள் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இந்த முறையையே குறிக்கிறது என்று விளக்கியுள்ளனர்.
…
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-857,
சமீப விமர்சனங்கள்