ஹுஜய்யா பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, கொம்பு உடைந்த குர்பானி பிராணியைப் பற்றிக் (குர்பானி கொடுக்கலாமா என்று) கேட்டார். அதற்கு அவர்கள், “அது உமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது (அதாவது, குர்பானி கூடும்)” என்றார்கள். அந்த மனிதர், “அது நொண்டியாக இருந்தால்?” எனக் கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அது குர்பானி கொடுக்கும் இடத்தை அடைந்துவிட்டால் (பிரச்சினை இல்லை). மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குர்பானி பிராணியின்) கண்ணையும் காதையும் நாம் நன்கு கவனித்துப் பார்த்து வாங்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என்று கூறினார்கள்.
அபூஜஅஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட பல செய்திகளில், காதின் முன்பகுதியோ அல்லது பின்பகுதியோ அறுபட்ட பிராணியை குர்பானி கொடுப்பதற்குத் தடை வந்துள்ளது. காதின் முன்புறத்தில் அறுபட்டிருந்தால் அதற்கு ‘முகாபலா’ என்றும், காதின் பின்புறத்தில் அறுபட்டிருந்தால் அதற்கு ‘முதாபரா’ என்றும் சொல்லப்படும்.
மேலும், குர்பானியில் அறுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ‘அள்பாஉல் உதுன்’ என்பதற்கு, “காதின் பாதிப் பகுதி துண்டிக்கப்பட்டது” என்று ஸயீத் பின் முஸய்யிப் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் மூலம், காது தொடர்பாகத் தடை செய்யப்பட்ட விஷயங்கள் உறுதியாகத் தெரிகின்றன. அதை நாம் விட்டுவிடுவது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதல்ல.
ஏனெனில், (நான்கு வகையான பிராணிகளைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று) நாம் ஏற்கனவே குறிப்பிட்ட பராஃ (ரலி) அவர்களின் ஹதீஸ், இரண்டு சாத்தியக்கூறுகளில் ஏதேனும் ஒன்றில் கண்டிப்பாக இருக்கும்:
1 . அது அலீ (ரலி) அவர்களின் இந்த ஹதீஸுக்கு முந்தையதாக இருக்க வேண்டும்; அவ்வாறாயின் அலீ (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ், அதனுடன் கூடுதல் சட்டத்தைச் சொல்வதாக அமையும்.
2 . அல்லது, அது அலீ (ரலி) அவர்களின் இந்த ஹதீஸுக்குப் பிந்தையதாக இருக்க வேண்டும்; அவ்வாறாயின் அலீ (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை அது மாற்றக்கூடியதாக (நாஸிக் ஆக) அமையும்.
அலீ (ரலி) அவர்களின் ஹதீஸ் உறுதியானது என்று நாம் அறிந்த பிறகு, அது மாற்றப்பட்டுவிட்டது (மன்ஸூக்) என்பதற்கான சான்றுகள் இல்லாததால், பராஃ (ரலி) அவர்களின் ஹதீஸோடு இதையும் நாம் உறுதியானதாகவே கருதுகிறோம். எனவே, இவ்விரண்டு ஹதீஸ்களின்படியும் செயல்படுவதை நாம் கடமையாக்குகிறோம்.
ஒரு சந்தேகமும் அதற்கான பதிலும்:
ஒருவர் கேட்கலாம்: “கொம்பு உடைந்த பிராணியைக் குர்பானி கொடுப்பதை நீங்கள் வெறுக்கத்தக்கதாகக் (மக்ரூஹ்வாக) கருதவில்லையே? ஆனால், ஜுரைய்யு பின் குலைப் —> அலீ (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹதீஸில், கொம்பு உடைந்த பிராணியைக் குர்பானி கொடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?” (பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-6195)
அதற்குப் பதில் அளிக்கப்படும்:
அந்தத் தடையை நாம் தவிர்த்ததற்குக் காரணம்: அலீ (ரலி) அவர்களே, கொம்பு உடைந்த பிராணியில் எவ்விதத் தவறும் இல்லை என்று கருதியுள்ளார்கள். இதனை நாம் ஹுஜய்யா பின் அதீ வழியாக வரும் ஹதீஸின் விளக்கத்தில் மேலே விவரித்துள்ளோம். இதன் மூலம் நாம் அறிவது என்னவெனில், அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், தாம் கேட்டதற்கு மாற்றமான ஒரு கருத்தைக் கூறினார்கள் என்றால், அந்தத் தடைக்கான சட்டம் மாற்றப்பட்டுவிட்டது (நஸக்) என்பது அவர்களிடம் உறுதியான பிறகே அவ்வாறு கூறியிருப்பார்கள்.
இனி, அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக வரும் ஹதீஸைப் பொறுத்தவரை, அதனை இப்ராஹீம் பின் முஹம்மத் அஸ்ஸைரஃபீ என்பவரின் வழியாகவே நாம் பெற்றுள்ளோம். அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரிலும், அதன் கருத்திலும் குறைபாடு உள்ளது. இதனை ஷுஅபா அவர்களும் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
(sharh-maanil-aasaar-6198: 6198)حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا حَسَنُ بْنُ صَالِحٍ , وَحَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ قَالَا جَمِيعًا , عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ , عَنْ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ قَالَ:
أَتَى رَجُلٌ عَلِيًّا فَسَأَلَهُ عَنِ الْمَكْسُورَةِ الْقَرْنِ فَقَالَ: «لَا يَضُرُّكَ» ، قَالَ: عَرْجَاءُ؟ قَالَ: ” إِذَا بَلَغَتِ الْمَنْسِكَ أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ
قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذِهِ الْآثَارِ النَّهْيُ عَنِ الْأُضْحِيَّةِ بِمُقَابَلَةٍ , أَوْ مُدَابَرَةٍ , وَذَلِكَ فِي الْأُذُنِ , مَا كَانَ مِنْ ذَلِكَ مِنْ قُبَالَةِ الْأُذُنِ , فَهُوَ مُقَابَلَةٌ , وَمَا كَانَ مِنْ أَسْفَلِهَا , فَهُوَ مُدَابَرَةٌ. وَبَيَّنَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ عَضْبَاءَ الْأُذُنِ الْمَنْهِيَّ عَنْ ذَبْحِهَا فِي الْأُضْحِيَّةِ فَقَالَ هِيَ الْمَقْطُوعَةُ نِصْفُ أُذُنِهَا. فَثَبَتَ بِذَلِكَ مَا نَهَى عَنْهُ مِنْ ذَلِكَ فِي الْأُذُنِ , وَلَمْ يَجُزْ لَنَا تَرْكُهُ , لِأَنَّ حَدِيثَ الْبَرَاءِ الَّذِي ذَكَرْنَا , لَا يَخْلُو مِنْ أَحَدِ وَجْهَيْنِ: إِمَّا أَنْ يَكُونَ مُتَقَدِّمًا , عَلَى حَدِيثِ عَلِيٍّ هَذَا , فَيَكُونُ حَدِيثُ عَلِيٍّ هَذَا , زَائِدًا عَلَيْهِ أَوْ يَكُونُ مُتَأَخِّرًا عَنْهُ , فَيَكُونُ نَاسِخًا لَهُ. فَلَمَّا لَمْ يُعْلَمْ نَسْخُ حَدِيثِ عَلِيٍّ بَعْدَمَا قَدْ عَلِمْنَا ثُبُوتَهُ , جَعَلْنَاهُ ثَابِتًا مَعَ حَدِيثِ الْبَرَاءِ رَضِيَ اللهُ عَنْهُ , وَأَوْجَبْنَا الْعَمَلَ بِهِمَا جَمِيعًا. فَإِنْ قَالَ قَائِلٌ: فَأَنْتَ لَا تَكْرَهُ عَضْبَاءَ الْقَرْنِ , وَفِي حَدِيثِ جُرَيِّ بْنِ كُلَيْبٍ , عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّهْيُ عَنْهَا. قِيلَ لَهُ: إِنَّمَا تَرَكْنَا ذَلِكَ , لِأَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ , لَمْ يَرَ بِذَلِكَ بَأْسًا , فِيمَا قَدْ رَوَيْنَا عَنْهُ , فِي حَدِيثِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ , فَعَلِمْنَا بِذَلِكَ أَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ , لَمْ يَقُلْ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَ مَا قَدْ سَمِعَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بَعْدَ ثُبُوتِ نَسْخِ ذَلِكَ عِنْدَهُ. وَأَمَّا حَدِيثُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , رَوَيْنَاهُ عَنْهُ مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ الصَّيْرَفِيِّ , فَحَدِيثٌ فَاسِدٌ فِي إِسْنَادِهِ وَمَتْنِهِ , قَدْ بَيَّنَ ذَلِكَ شُعْبَةُ
Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-6198.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்