தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1112

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று மூன்று தடவை கூறிவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.

(almujam-alawsat-1112: 1112)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا أَبُو جَعْفَرٍ قَالَ: نا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: نا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ هُودِ بْنِ عَطَاءٍ قَالَ: سَمِعْتُ شَدَّادًا أَبَا عَمَّارٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ يَقُولُ:

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلًا يَلْتَمِسُ الْخَيْرَ وَالذِّكْرَ، مَا لَهُ؟ قَالَ: «لَا شَيْءَ لَهُ» يَقُولُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا خَلَصَ لَهُ، وَابْتُغِيَ بِهِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ هُودٍ إِلَّا مُعَاوِيَةُ، تَفَرَّدَ بِهِ: عُثْمَانُ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1112.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1131.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4221-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹ்மான் பின் யஸீத்-அல்இகால் பற்றி
    , அபூஅரூபா-அல்ஹுஸைன் பின் முஹம்மது அவர்கள், இவரின் மீதும், இவரின் மார்க்கத்தின் மீதும் இவர் நம்பப்பட்டவர் அல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஃபா-1/334, லிஸானுல் மீஸான்-1/523)

சரியான ஹதீஸ் பார்க்க: நஸாயீ-3140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.