தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-759

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் (இப்னு அபூஹாதிம்) கூறுகிறார்:

ரவ்ஹு பின் உபாதா அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா —> முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் “உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்” என்ற செய்தி பற்றியும்,

ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட செய்தியுடன் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்று அறிவிக்கும் செய்தி பற்றியும் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

அதற்கவர்கள், “இந்த இரண்டு செய்திகளும் சரியானவை அல்ல; அம்மார் பின் அபூஅம்மார் அறிவிக்கும் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மையாகும். அம்மார் பலமானவர் ஆவார். (முஹம்மது பின் அம்ர் இடம்பெறும்) மற்றொரு செய்தி சரியானதல்ல” என்று பதிலளித்தார்கள்.

 

(alilal-ibn-abi-hatim-759: 759)

وسألتُ أبِي عَن حدِيثٍ ؛ رواهُ روحُ بنُ عُبادة ، عن حمّادٍ عن مُحمّدِ بنِ عَمرٍو ، عن أبِي سلمة ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :

إِذا سمِع أحدُكُمُ النِّداء ، والإِناءُ على يدِهِ فلا يضعهُ حتّى يقضِي حاجتهُ مِنهُ.

قُلتُ لأبِي : وروى روحٌ أيضًا عن حمّادٍ ، عن عمّارِ بنِ أبِي عمّارٍ ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم مِثلهُ ، وزاد فِيهِ : وكان المُؤذِّنُ يُؤذِّنُ إِذا بزغ الفجرُ.
قال أبِي : هذينِ الحدِيثينِ ليسا بِصحِيحينِ : أمّا حدِيثُ عمار ، فعن أبِي هُريرة موقُوفٌ وعمّارٌ ثِقةٌ. والحدِيثُ الآخرُ ليس بِصحِيحٍ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-759.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: அபூதாவூத்-2350 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.