அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.
(almujam-alawsat-173: 173)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ زُغْبَةَ قَالَ: نا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: نا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي قَبِيلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: «مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكَلِ السَّبْعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-173.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-180.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-6594 .
சமீப விமர்சனங்கள்