தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-57

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

  வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வ ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹீ கஸீரா” (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன், புகழுக்குரியவன் என்று அதிகமாக அவனைத் துதிக்கிறேன்) என்று கூறியதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின், திரும்பி “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவர், (நான்தான் அல்லாஹ்வின் தூதரே!) அதனால் நன்மையைத் தான் நாடினேன் என்று கூறினார். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன. அர்ஷைத் தவிர வேறு எதுவும் அதைத் தடுக்கவில்லை” என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 57)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِنْدَهِ الْأَصْبَهَانِيُّ، ثنا أَبُو كُرَيْبٍ، ثنا سِنَانُ بْنُ مُظَاهِرٍ، ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلًا يَقُولُ: اللهُ أَكْبَرُ كَبِيرًا، وَسُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ كَثِيرًا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَنْ صَاحِبُ الْكَلِمَةِ؟» قَالَ: مَا أَرَدْتُ إِلَّا الْخَيْرَ قَالَ: «لَقَدْ فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ فَمَا نَهْنَهَهَا شَيْءٌ دُونَ الْعَرْشِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-57.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17556.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்ஜப்பார் பின் வாயில் (ரஹ்) அவர்கள், தனது தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்பதால் இது முர்ஸல்-முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1116 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.